2020இல் வாசித்த நூல்கள்

 

வாசித்ததைப் பதிவு செய்து வைக்கவும் பின்னொரு நாள் பார்த்து மகிழவும், குறிப்பாக, அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வாசிக்க உந்துதலாகவும் இப்பதிவு! நண்பர்களும் எத்தனை நூல்கள் வாசித்தீர்கள் என்று சொன்னால் ஒருவருக்கொருவர் உந்துதலாக இருக்கும். வாசிப்போம்! வாழ்வோம்!

ஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்

 ராணி முகர்ஜி நடித்து 2018இல் வெளியான இந்தித் திரைப்படம் 'ஹிச்கி'.  வித்தியாசமான உடல்நலக் குறைபாட்டை சமூகத்தில் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அது பரவாயில்லை, அனைத்தையும் அறிந்திருக்க முடியாது என்பதை நம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, "கற்றது கைமண் அளவு" என்று! ஆனால் ஒரு நோயை அறிய வரும்பொழுது எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் சான்றாண்மை இருக்கிறது! 

பொதுவாகச் சமூகத்தில் புதிய ஒரு நோயைக் காணும்பொழுது அதனைக் கிண்டல் செய்வதையும்  பாதிக்கப்பட்டவரைச் சாதாரணமாக, சக மனிதராக நடத்தாத நிலையையும் பேசும் இப்படம் இன்னும் சில விசயங்களையும் சிறப்பாக எடுத்துக்காண்பிக்கிறது. 

சொந்தச் சீப்பு - கி. ராஜநாராயணன்

 

திரு.கி. ராஜநாராயணன் (கி ரா) அவர்களுடையப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய நிகழ்வில் கி.ராஅவர்களுடைய 'சொந்தச் சீப்பு' என்ற கதையைப் பகிர்ந்தேன். எனக்கு மிகவும் மகிழ்வான நிகழ்வில் மேலும் இனிமையூட்டினார் கி ராஅவர்கள் தன்னுடைய வருகையினால். 

 

சொந்தச் சீப்பு என்னுடைய யூட்யூப் தளத்தில்!


நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.


தி டெவில்'ஸ் அரித்மெடிக்

நான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும்? எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்? என்றோ நடந்ததை ஏன் ஆண்டு தோறும் பேசவேண்டும்? இப்படி எண்ணற்றக் கேள்விகள் ஹானாவின் உள்ளத்தில் குமுறின. வாதிட்டு அழுது அரற்றினாலும் தாயின் கட்டளைக்கிணங்கி  தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். தாத்தா வில், பாட்டி பெல், வில்லின் தங்கை, ஆன்ட் ஈவா, தம்பி ஆரோன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தா வில் தொலைக்காட்சியில் பழைய காட்சிகளை ஓடவிட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஏன் பார்க்க வேண்டும்? ஏன் திட்ட வேண்டும்? ஹானாவிற்கு எரிச்சலாக இருந்தது.

வல்லினச் சிறகுகள் -அக்டோபர் 2020


 வல்லினச் சிறகுகள் அக்டோபர் 2020 இல் என்னுடைய இரு கவிதைகளும், சாதனைப் பெண் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியுடன் என் நேர்காணலும்.

அறம் தள்ளுதல் மறமோ


பிரதிலிபியில் இக்கவிதை. 

இக்கவிதையின் ஆங்கில ஆக்கத்தையும் என்னுடைய ஆங்கிலத் தளத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நன்றி.



ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்


 

முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், அக்டோபர் 4ஆம் நாள், அவருடைய மகனார் முனைவர் திரு.பாட்டழகன் அவர்களால், பன்னாட்டுக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிக்கப்பட்டது. 'தமிழே எங்கள் தலைமை' என்ற முதன்மைத் தலைப்பில் சிறப்பாக நிகழ்ந்த  இக்கவியரங்கில் நான்கு அமர்வுகளில், 12 துணைத்தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டக் கவிஞர்கள் உலகெங்குமிருந்து கவிதைகள்  வாசிக்க,  ஏறக்குறைய 8 மணிநேரம் நடந்து சாதனைக் கவியரங்கமாகவே அமைந்தது. 

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

 மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்தநாளில் நடத்தப்பட்ட இணையவழிச்  சிறப்பு நிகழ்வில் கவிதை வாசித்த வாய்ப்பிற்கு நன்றியுடனும் மகிழ்வுடனும் இங்கே பகிர்கிறேன். 

'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்

 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின்  'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.

திரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை



திருவாரூர் திரு.வி.க.கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைப்பு: 'நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?' என் உபதலைப்பு: 'காடு' கவியரங்கத் தலைவர்: Na. Muthunilavan | நா. முத்துநிலவன் 12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் .

நான் மட்டும் மாறியிருக்கிறேன்


சடசடத்துப் பெய்யும் மழையும்
பட்பட்டென்று மறையும் குமிழும்
காற்றிலாடும் மரங்களும்
அவற்றில் ஆடும் இலைகளும்

500ஆவது பதிவு பன்னாட்டுக் கவியரங்குடன்




தேன் மதுரத் தமிழில் 500ஆவது பதிவு!
சென்ற வாரம்தான் யதார்த்தமாகப் பார்த்துவிட்டேன் ஐந்நூற்றைத் தொட இன்னும் இரண்டு பதிவுகள் என்று! என்ன எழுதலாம் என்ற யோசனையும் எழுந்தது! கவிதையா? கட்டுரையா? சங்க இலக்கியமா? புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? இதுவா? அதுவா? இப்படியா? அப்படியா? என்று!! அலுவலகப் பணிகளும் குழந்தைகள் பள்ளிக் கடமைகளும் பெருக இதனை பின்னடுப்பில் வைத்துவிட்டேன். நான் விட்டாலும் கவிதை விடாது என்பது போல வந்தது கவியரங்கம் கைகொடுத்து!!
ஒன்றா.. இரண்டா.. கவிதைகள்?
12 நாடுகளிலிருந்து வரும் 16 கவிஞர்களின் கவிதைகளுடன் அரங்கேறுகிறது
  திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி நடத்தும் 
பன்னாட்டுக் கவியரங்கம் அண்ணன் திரு.முத்துநிலவன் தலைமையில்!
என்னுடன் அன்புச் சகோதரிகள்/உறவுகள்  கீதாவும் மைதிலியும்!
இவர்களுடன் சகோதரி பெண்ணியம் செல்வக்குமாரியும் சகோ மீரா செல்வகுமாரும் வலைத்தள நண்பர் யாழ்பாவாணனும்!

கவியரங்கத் தலைப்பு:
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?
என்னுடைய உபதலைப்பு காடு!
என் மனதிற்கு மிகவும் இணக்கமான இயற்கையும் கவிதையும் இனிமையாய் இணைந்து, இதோ என் ஐநூறாவது பதிவு!
தொடர்ந்து இணைந்தும் ஊக்குவித்தும் வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பின் நன்றிகள்!
கவியரங்க அழைப்பிதழ் இங்கே, இணைவதற்கு வேண்டிய தகவல்களுடன்!
இணைய வழியில் இணையுங்கள் நண்பர்களே!
இது நம் திருவிழா!
நன்றி!

விருப்பமுள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைவதற்கு ஓர் இணைப்பு இது.. பயன்படுத்திப் பயன்பெறலாம்! நன்றி!

இணைய மேடை இங்கிதங்கள்

படம்: நன்றி இணையம்

இணையவழி இணைப்புகளில் (Zoom) இணையும் பொழுது நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

நூல்கள் எனும் நுட்ப ஒளி

படம்: நன்றி இணையம் 

கண்டதும் காதல் காணாமல் காதல்

கடிதத்தில் காதல் கணினியில் காதல்

என்னென்னவோ சொல்கிறார்கள்

என் காதல் துளிர்த்ததெப்போது எப்படி?

உலகக் கவியரங்கம் கவிமாலை சிங்கப்பூர்

அலுவல் கழுத்தை நெரிக்கையிலே 
அயர்ச்சி நீக்கும் இளங்காற்றாய் 
அழைப்பொன்று வந்ததுவே 
கவியரங்க மேடை காட்டி 
கவியொன்று பாடச் சொல்லி 

Dr. Muthulakshmi Reddy | மரு.முத்துலட்சுமி ரெட்டி



அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் வாரக் கொண்டாட்டத்தில் (தகவல் பதிவு), சமூகத்தில் தடம் பதித்தத் தாரகை மரு.முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்து கொண்டதன் காணொலி.

என்னுடன் இன்னும் நான்கு தோழியர் பகிர்ந்து கொண்ட முழு நிகழ்ச்சியையும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.

தந்தையர் நாள் வாழ்த்து


 தந்தையாகிச் சிந்தை நெகிழ்ந்தாலும்
தன்னுடலில் தாய்போல் உணராமல்
புரிந்தும் புரியாமலும்
பரிவும் பரிதவிப்புமாய் பொறுப்பினை மனம்சுமந்து

குழந்தை துள்ளுவதாய்த் தாய் சொல்ல
துள்ளி வந்து தாய்வயிறு தொடுவதற்குள்
குழந்தை புரண்டுபடுத்து துயில் தொடரும்
ஏமாற்றமும் ஏக்கமும் மகிழ்வில் மறைத்து
ஏங்கி தாங்கிக் காத்திருந்து

மென்பூவாய் பிஞ்சு கைவர
மென்மை கையில் திரட்டி
மனம்தாங்கியச் செல்வத்தை ஏந்தி
அன்பூறி அகம் நிறையக் கண்டு

தோள் தாங்கி கையில் தாங்கி
வாழ்வெலாம் உள்ளத்தில் தாங்கி
பிள்ளையே வாழ்வென கடமையாற்றி
அரணாய் அரவணைக்கும் அப்பாக்கள் போற்றி !

தந்தையர் அனைவருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துகள்!







இவளுமானதும்


அன்றோர் நேரம்
பொன்வானில் மேகங்களைப் பார்த்திருக்க
எண்ணச் சிறகை இரவல் பெற்று
கண்விட்டகன்றன

அன்னையர் நாள் - இவளின்றி நானா?


வாழ்வில் ஒவ்வொரு வெற்றியிலும் மகிழ்வின் தருணங்களிலும் என் தந்தையை நினைத்து அவரைப் பற்றி சிலாகித்துப் போற்றிய நான் ஒருபோதும் என் தாயைப் பற்றி, அவர் செய்த தியாகங்கள், அவருடைய நிபந்தனை இல்லாத எல்லையில்லாத அன்பினை, வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்துக் குடும்பத்தை நடத்தியப் பாங்கையும் பற்றிப் பேசியதில்லை.

மகளிர் வாரம் முதல் நாள் - ஆசிரியர்களுக்கு

Image may contain: text


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மகளிர் வாரம் என்று கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு நாள் கொண்டாடப்பட்ட மகளிர் நாள் இந்த ஆண்டு ஒரு வாரமாக இணையவழியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஆசிரியர்களுக்கு அர்ப்பணம். இணைய இணைப்பில் நாற்பது பேருக்கும் மேலாக இணைந்து ஒன்றரை மணித்துளிகள் சிரிப்பும் விளையாட்டும் கவிதையும் என்று கலகலத்தது.

சின்றெல்லாவும் சைக்கிளில் பறந்த வினோதனும்

படம்: நன்றி இணையம் 
இளவரசிகள் என்றாலே இனிமை தான். எங்கோ என்றோ அரண்மனையில் வாழ்ந்தவர்கள் மட்டுமா இளவரசிகள்? நம் வீடுகளில் மழலை பேசி, சிரிப்பொலியால் சிந்தை மயக்கும் மகள்கள் அனைவரும் இளவரசிகளே!

தேன்மதுரத் தமிழோசை - யூட்யூப் மற்றும் டிக்டாக்


எப்போதாவது ஒரு கதை, ஒரு நூல் வாசிப்பு, கைவினை என்று குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் பகிர்ந்ததோடு மறைந்திருந்தது தேன்மதுரத் தமிழின் யூட்யூப் தளம். பல வகைகளில் பயன்படுத்தவேண்டும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசை இருந்தாலும் செய்யவில்லை. நேரம் காரணமா? சோம்பேறித்தனம் காரணமா தெரியவில்லை. இதுவே தான் ஆங்கிலத் தளத்துக்கும். Jack of many trades master of none (can't say all) என்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சமூக இடைவெளி

படம்: நன்றி இணையம்

வீட்டில் இருப்பு!
உடல் மட்டும் தான்,
கண்டம் தாண்டிச் செல்கின்றன

எண்ணில்லா நினைவுகளுக்குத் தலைப்பேது?


குடும்பமாகிய நட்பு. அப்பாவின் நெருங்கிய நண்பர், இருவர் குடும்பத்தினரும் ஒன்றாகிப்போன அன்பு. எங்கள் நலம் விரும்பி.

வீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்


பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!

பழுப்பன் - சிறுவர் கதை


நான் ஒரு கதை சொன்னேன். அதனை யூடியூபில் வெளியிட்டேன். குழந்தைகளுக்குப் பிடித்தது. ஆனால் ஓர் ஏமாற்றம்... முயல் எங்கே முயல் எங்கே என்று கேட்டனர்.

எதிர்பார்ப்பார்களோ


என்ன பேசினாலும்
புன்னகை மட்டுமே உதிர்ப்பார்
வாசிக்கவா என்றால்
ஆம் என்று தலை ஆட்டுவார்
புரிகிறதா இல்லையா
என்றுகூட ஐயம் எழும்

கரோனா

🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
😳😱😳😳😳😳😳😳😳😳😳😳
 😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

அச்சென்று ஒரு தும்மல்
அச்சோ அச்சோ என்று 
பல குரல் கேட்குது 
பின்
பகீரென சிரிக்குது ...
பகீர்
கரோனா

🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
😳😱😳😳😳😳😳😳😳😳😳😳
 😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

ஒவ்வொருவரும் சமநிலைக்கு - உலக மகளிர் நாள் 2020

படம்: நன்றி இணையம் 

உலக பெண்கள் நாள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்கள் நாளுக்கு ஒரு கருத்தை மையமாக அறிவிக்கும். அவ்வகையில் இவ்வாண்டு #EachforEqual, #ஒவ்வொருவரும்சமநிலைக்கு என்பதே கருவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சமநிலைக்கு, ஒவ்வொருவரும் சமநிலை நோக்கி என்று நாம் கொள்ளலாம்.

எங்கோ

படம்: நன்றி இணையம்

எங்கோ அழும் அழுகை என் காதில் கேட்கிறது
எங்கோ எரியும் நெருப்பு என் நெஞ்சைச் சுடுகிறது

உலகத் தாய்மொழி நாள் பா - சங்கத் தமிழே தாயே

தமிழன்னை படம்: நன்றி இணையம்

தமிழே தாயே தாய்மொழியே தவமே
அமிழ்தே அன்னாய் பைந்தமிழே
அறிவே ஆன்றோர் அறமொழியே
செறிவே என்றும் என்னுயிரே
உலகில் எங்கு வாழ்ந்தாலும்
சொல்லில் நீயே ஊறிடுவாய்
உற்றார் தூர உறைந்தாலும்
சுற்றம் சேரத் தூண்டிடுவாய்   
எங்கும் தமிழர் சேர்ந்திடவே
சங்கத் தமிழே சங்கமிப்பாய் தாயே


ஐங்குறுநூறு 281 - நூறுநூறு ஆயிரமாய்


படம்: நன்றி இணையம்
காதல் ஆழ்ந்த அன்பினது, காதலுக்குத் தோள்கொடுத்த எதனையும் மறக்காது நன்றி பாராட்டும்! இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த தமிழர் காதலோடுஇயற்கையும் போற்றினர்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா




எல்லோருக்கும் எங்கும்
சுவாசித்தல் போல
வாசித்தல்



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020
நகர் மன்றம்
பிப்ரவரி 14 முதல் 23 வரை
காலை 9.30 முதல் இரவு 9 வரை
நடத்துபவர்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்று வாங்கி வாசிப்பவர் : நாம் தான்
பயனடைபவர்: நாமே தான்.


சுவாசிக்க வாசிப்போம், வாசிக்க சுவாசிப்போம்



கருங்கடர்க் கொண்டல்


படம்: நன்றி இணையம் 
கீழ்த்திசைக் கதிரோன் கடலெழும் முன்பே
பளிச்சிட்ட ஒளியில் கண்கள் மலர்ந்தேன்
வாள்ஒளி வானம் கீறக் கண்டேன்
வாட்சண்டை வீரர் முழங்கக் கேட்டேன்

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...