'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு



முதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன்  என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...