செம்மொழியின் செம்மொழி

தினம் ஒரு திருக்குறள் என்றும் தினம் ஓர் அறநெறிப்பாட்டு என்று சிறப்பாகச் சொல்கிறாள் ஒரு சிறுமி! அழகான தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பார்த்து வாசிக்காமல்  மனதிலிருந்து சொல்லி அதற்கான பொருளையும் கூறும் விதம், நம்மை ஈர்க்காமல் இருப்பதில்லை!

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்

       வேலூரில் வாழும் அத்தை வீட்டில் தங்கி மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் படிக்கும் திட்டத்தில் சென்னையிலிருந்து வேலூர் செல்கிறான் கிச்சா. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதனால் அக்கௌன்ட்டன்சி பாடத்திற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடு. வாத்தியார் வீட்டைத் தேடி செல்லும் அவன் தெருமாறிச் சென்று உமாவைச் சந்திக்கிறான். இச்சந்திப்பு கிச்சா மற்றும் உமாவின்  வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தது என்பதை அவர்கள் குடும்பப் பின்னணியோடு இணைத்து தெளிந்த நீரோட்டம் போலச் சீராகச் சொல்கிறது Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் என்கிற நாவல்.

வேதராஜ் தாத்தா


கரும்பாறையினைக் கல்லினால் உராய்ந்ததைப் போல வானில் ஒரு ஒளிக்கீற்று. மனதில் ஒன்று, இரண்டு, மூன்று, நா.. எண்ணுவதற்குள் ஒலித்தது இடி. மூன்று மைல் தொலைவில் மையம் கொண்டிருத்த புயலினால் ஏதோ மரமுதிர்த்த இலைகள் திசை அறியாமல் என் வண்டியின் முன் கண்ணாடியில் தஞ்சம் புகவந்தன. ஆனால் எனக்குச் சாலை காட்டத் துடித்துகொண்டிருந்த முன்துடைப்பான் இலைகளை நொடியில் தள்ளிவிட்டது.

ஆண்'கல்வி'


அடுப்பூதச் சொன்னார்
அடங்கி வாழச் சொன்னார்
படிப்பெதற்கு என்றார்
பால்ய மணம் செய்வித்தார்

படிதாண்டக் கூடாதென்றார்
பத்தினி என்றார்

சோதனைகளை சாதனைகளாக்குவர் மாதர் - சாதனைப் பெண்கள் நூலறிமுகம்


சோதனை கண்டு மனம்தளராமல் சாதனை கண்ட பெண்மணிகள் பலர். அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் 'சாதனைப்பெண்கள்' தொகுப்பினைப் பகிர்வதில் பேருவகை அடைகிறேன். சோதனைக் கொம்பைத் தகர்த்து முன்னேற்றப்படிகளாக மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் சமூகத்தினையும் தங்களோடு சேர்த்து முன்னேற்றிய இப்பெண்மணிகள் வணக்கத்திற்கு உரியவர்கள். நீங்கள் இவர்களில் சிலரை அறிந்திருக்கலாம், சிலரை அறியாதிருக்கலாம், வாசித்துதான் பாருங்களேன்.

முன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை

"கல்வியறிவு என்பது, பொதுவான கற்பித்தலுடன் சேர்த்து எங்கும், அனைவருக்கும் அடிப்படை மனித உரிமையாகும்." - கோபி அன்னான்

அனைவருக்கும் தேவை இல்லை என்ற யதேச்சதிகாரம் அல்லவா தெரிகிறது??

வடு, வலி, விதும்பல்


வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.

ஜனவரி 14, 1991


மனக்கடலின் ஆழத்திலிருந்து மேலெழுந்து ஒருவாரகாலமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நினைவுகள். ஆழி தள்ளும் பலவிதக் கிளிஞ்சல்கள் போல உள்ளம்  நிறைக்கும் உணர்வுகள் தான் எத்தனை! ஏக்கம் சுரக்கும்  இந்நினைவலைகளை இதயத்துடிப்போடு விரல்வழிக் கொணர்ந்து எழுத்துகளில் கோர்த்துவிட்டால்  இதயம் இலேசாகுமோ என்னவோ என்றும் இருக்குமல்லவா?

புத்தாண்டு நினைவலைகள்


சத்தமின்றிச் சலிப்பின்றி சுழன்றுக் கொண்டிருக்கும் காலச்சக்கரத்தில் சமூகம் சார்ந்து, தனிமனிதன் சார்ந்து, இடம் சார்ந்து, மதம் சார்ந்து, பருவங்கள் சார்ந்து பல விழாக்கள், நிகழ்வுகள். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக மகிழ்வாக ஆங்கிலப் புத்தாண்டு. புத்தாண்டுக்குத் தெரியுமோ மொழிகள் என்ற  கேள்வி எழுந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் இனத்திற்கும் இடத்திற்கும் அவரவர் ஆண்டின் தொடக்கம் உண்டு, ஒரு புத்தாண்டு உண்டு. பரங்கியர் தயவால் ஆங்கிலம் உலகில் பரந்த இடத்தைப் பிடித்ததால் ஆங்கிலப் புத்தாண்டு உலகமுழுவதும்!


சரி, கல்விக்கூடம் சேர விண்ணப்பிக்கும் குழந்தைபோல பிடரிசுற்றி காதைத் தொடப் பார்க்கிறேன். நேராக காதிற்கு, இல்லை, பதிவிற்கு வருகிறேன். புத்தாண்டு நாள் உலைகிண்டும் கரண்டிபோல என் ஆழ்மனம் வரைத் தொட்டுக் கிளறிவிட்டு சூரியனோடு மறைந்துவிட்டது. மனதின் நினைவுகளோ சுழன்று கொண்டேயிருக்கிறேது. மன உலையின் நினைவலைகளை இங்கே பரிமாறலாம் என்றே இப்பதிவு.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...