'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு
முதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன் என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
பிங்கோவும் கேத்தியும்
பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு! விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, I, N, G, O என்ற எழுத்துகளும் அவற்றின் கீழ் எண்களும் இருக்கும். நடுவராக இருக்கும் ஒருவர் ஏதாவது ஓர் எண்ணைச் சொல்ல, அது நம் அட்டையில் இருந்தால் அதன் மேல் ஒரு நாணயம் வைத்துக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு இடம்-வலமாக அல்லது மேல்-கீழாக ஒரே கோட்டில் ஐந்து எண்களும் அழைக்கப்பட்டுவிட்டால் அவர் "பிங்கோ" என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். அவரே வெற்றியாளர்! எண்ணைத் தேர்ந்தெடுத்து அழைக்க ஒரு டப்பாவும் இருக்கும்..அதைக் குலுக்கிச், சுற்றிவிட்டு வரும் எண்ணை எடுக்க வேண்டும். சரி, இப்பதிவின் நோக்கம் விளையாட்டைப் பற்றியது அல்ல. வாழ்க்கைப்பாடம், அனுபவம் பற்றியது..
கேட்கக் காதுள்ளவன்
Image: Thanks Internet |
பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...