சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

  

ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை 
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் 
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்  
தோழி, அவன் வாழி! 
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும் 
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று 
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!

ஐங்குறுநூறு 202 - குடுமி கொண்ட குதிரைகள்

 

அன்னாய் வாழ்க! சொல்வதைக் கேளாய்!
நம்ஊர் பார்ப்பனச் சிறுவர் போல
குடுமி கொண்ட குதிரைகள் பாராய்
நெடுமலைத் தலைவன் தேரில் பூட்டியே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், 

நன்றுபெரிது சிறக்க - சங்க இலக்கிய வாழ்த்து

 நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

விளைக வயலே வருக இரவலர்
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசிஇல் ஆகுக பிணிகேன் நீங்குக
வேந்து பகை தணிக ஆண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவுஇல் ஆகுக
நன்றுபெரிது சிறக்க தீதுஇல் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க

 ஐங்குறுநூறு பாடல்களில் இருந்து , மேலும் அறிய கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்.

பொருள்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல் உண்ணட்டும் (தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது (தீயது) கெடட்டும் (அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப்  பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்! 
- கிரேஸ் பிரதிபா

மீள் பதிவு, இணைப்பு: 

https://thaenmaduratamil.blogspot.com/2013/04/nerpala-pozhiga.html?m=1

ஐங்குறுநூறு 402 - யாழிசை இல்லறம்

 


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து  இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். 

ஐங்குறுநூறு 201 - என்ன மரமது சொல்வாய்


"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், What tree is it my friend.

சங்க இலக்கிய மாந்தர் பார்வையில், காதல்!

 

பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் பிப்ரவரி மாதக் கருப்பொருள்  'இலக்கியத்தில் காதல்'. இதில் கிழக்கமெரிக்க நேரம், பிப்ரவரி 12ஆம் நாள், இரவு 9 மணிக்கு 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசியது பேருவகை எனக்கு. அதன் வலையொளி இணைப்பையும் பாடல்களையும்  இங்கே பகிர்கிறேன்.

சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல் - நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் பேசுகிறேன்

வணக்கம், அன்பு  நண்பர்களே! என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் வெற்றியிலும் வலையுலக நண்பர்களாகிய உங்கள் பங்கு பெரிது. குறிப்பாக என்னுடைய சங்க இலக்கியப் பதிவுகளுக்குப் பேராதரவு தந்து ஊக்குவித்தது. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய உலா நிகழ்ச்சியில் 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசுகிறேன். 

ஐங்குறுநூறு 281 - நூறுநூறு ஆயிரமாய்


படம்: நன்றி இணையம்
காதல் ஆழ்ந்த அன்பினது, காதலுக்குத் தோள்கொடுத்த எதனையும் மறக்காது நன்றி பாராட்டும்! இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த தமிழர் காதலோடுஇயற்கையும் போற்றினர்.

ஐங்குறுநூறு 35 - நார் உரி ஆம்பல் மென்கால்


 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

ஐங்குறுநூறு 34 - புழைக்கால் ஆம்பல்

ஏனடி தோழி? நான் சொல்லாவிட்டாலும் என் வருத்தம் என் கண்களில் தெரிகிறதே. கேடுகெட்ட அவர் செயலினால் நான் கொண்டிருக்கும் சினத்தை அறிவாய் அல்லவா?

Image:thanks Google

ஐங்குறுநூறு 210 - குன்று நோக்கத் தணியும் நோய்

இது வேறொன்றுமில்லை தாயே, மந்திரவாதி வேண்டாம். தெய்வத்தால் என்று நினைத்துப் பலிகொடுத்ததால் புலால் நாற்றமெடுக்கும் கல்லின் மீது ஏறி நின்று அவருடைய அழகிய மலையைப் பார்த்தாலே போதும்.

image:thanks google

ஐங்குறுநூறு 209 - கண் மறையா மணிக் குன்று

இருண்ட மழைமேகம் மறைக்காமல் எப்பொழுதும் கண் முன் தெரிகிறதே அவருடைய நீலமணி போன்ற குன்றுகள். நீ என்னடாவென்றால் மறந்திரு என்று எளிதாகச் சொல்கிறாய்.



ஐங்குறுநூறு 208 - நீலமலர்க் கண்கள்

அவர் நாட்டு நீலநிற மலை கண்களில் இருந்து மறையும் போதெல்லாம் இவள் கண்கள் நீரால் நிறையும். அக்குறையை நீக்கி வைத்துவிட்டீர்கள்.

ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?

நன்றி: இணையம்
 உன்னைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறாரடி  உன் புருஷன்.

இதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக்  குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண்டும் என்று  தலைக்குத் தலை  போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.

ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...

கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.