மழையின் இன்பம்

கருங்கொண்டல் கண்டு ஓடி ஒளிவதா
கானமயில் போல ஆடிக் களிப்பதா;
வெள்ளித்துளி வீழ்வது கண்டு குடை விரிப்பதா
இலையைப்போல் பூவைப்போல் லயித்து சிலிர்ப்பதா;
இத்தயக்கங்கள் விலக்கி மழைநீர் முகத்தில் ஏந்தி
வதனம் பூவாய் மலர உள்ளம் சிலிர்த்து
மனச்சிறகை விரித்து துள்ளி ஆடுவதல்லவா
இன்பம், மட்டற்ற இன்பம்!

என் தமிழே, கண்ணுறங்கு!

அன்பே ஆருயிரே முத்தே மாணிக்கமே
விலைமதிப்பில்லாக்கற்கள்  பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!

-நடவு செய்யப்போகும் ஒரு தமிழ்த்தாயின் தாலாட்டாக நான் எழுதியது.

'
விலைமதிப்பில்லாக்கற்கள்  ' இந்தச் சொல்லின் இடத்தில் இரத்தினங்கள் என்று முதலில் எழுதினேன், பின்னர் அது வடமொழி என்று அறிந்து இப்படி மாற்றினேன்.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...