மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்




கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...