ஐங்குறுநூறு 212 பாடியவர் கபிலர்
குறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.
"சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்!"
எளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே?
விளக்கம்: தலைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.
சொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை - கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே
குறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.
"சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்!"
எளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே?
விளக்கம்: தலைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.
சொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை - கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே