அமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை
ஜனவரி இருபதாம் தேதி பள்ளியில் விழுந்துவிட்டேன் என்று சொன்ன மகனின் காலைப் பார்த்தால் முழங்காலுக்குக் கீழே இன்னொரு முழங்கால் போல வீக்கம். ஒரு புண், இரத்தக் கட்டு. பதறி உடனே மருத்துவருக்கு அழைத்தேன். மூன்றே முக்கால் மணியாகி விட்டிருந்தது. இங்கு அந்த நேரத்தில் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பது கடினம். அவசரச் சிகிச்சைக்குத் தான் செல்லச் சொல்வார்களோ என்று ஒரு ஐயம். செவிலி பார்ப்பார், உடனே வாருங்கள் என்றார்கள். அழைத்துச் சென்றேன். பார்த்துவிட்டு, ஐஸ் வையுங்கள், வலிக்கு ப்ரூபென் கொடுங்கள், சிவந்து காய்ச்சல் கீய்ச்சல் வந்தால் அவசர சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார்.
என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்
மந்தையோட்டிச் சென்றிருக்கிறான் கணவன். பிள்ளைகளுடன் காட்டில் தனித்தொரு வீட்டில் வாழ்கிறாள் அவன் மனைவி. வறுமையுடன் அவள் சந்திக்கவேண்டியிருந்தப் பிரச்சனைகள் அதிகம். அப்படியிருக்க, வீட்டில் நுழைந்த கருநாகம் ஒன்றிடமிருந்துப் பிள்ளைகளைக் காக்க இரவெல்லாம் விழித்துப் பார்த்திருக்கிறாள். அவளோடு காத்திருக்கிறது அலிகேட்டரும், மரத்தடுப்பின் ஒரு பொந்திற்குள் நுழைந்திருந்த கருநாகத்தை எதிர்பார்த்தபடி.. மெழுகுவர்த்தி அணையும் தறுவாயில் தன் கடைசி ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...