வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை



 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்களின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' சிறுகதையைப் பகிர எனக்கு வாய்ப்பு கொடுத்த தோழர் கனிமொழிக்கு நன்றியுடன், இணைப்பைப் பகிர்கிறேன்.



இக்கதையை கதைவீதியில் (புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தின், சிறுகதை படிக்கும் /படைக்கும் ஆர்வத்தைத் ஊக்கிவிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கும்  ஒரு புலனக்குழு) மார்ச் திங்கள் பெண்கள் நாளையொட்டி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதையைத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த கவிஞர் திருமிகு. முத்துநிலவன் அண்ணா அவர்களுக்கும் கவிஞர் திருமிகு. கீதா அவர்களுக்கும் நன்றி.



டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம்.

வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி.  பட்டிமன்றத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் நட்புகளே! நன்றி!



ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

  

ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை 
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் 
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்  
தோழி, அவன் வாழி! 
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும் 
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று 
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.




 


'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

 


சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன்

இலண்டன் தமிழ் வானொலி

மற்றும்

உலகப் பெண் கவிஞர் பேரவை

இணைந்து வழங்கும்

"பேதையல்ல பெண் மேதை"

மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்


ஆளுமை இருக்கைகள் உனதென அமை!

என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...