விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.