ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று
வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு
இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல்
நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார்
திரு.பொ.வே.சோமசுந்தரனார்.