இரலை மான்களின் கொம்புகள் போல
மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க
மண்ணோடு கலந்த மழை நீர்
பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட
பள்ளத்தாக்கின் மேலே ஒருபுறம்
அமைக்கப்பட்ட வேலியில் சாய்ந்து
அமைதியான இந்தக் காட்சியையும்
சலசலக்கும் இசையையும்
உள்வாங்கி ஒன்றித்துப் போன நான்
சர சர என்று
திடீரென்று அமைதியைச் சிதைத்த
ஓசையின் திசை திரும்பினேன்
உவலை கீழே நெளிந்து சென்ற
பாம்பு பார்த்தும் பதைக்கவில்லை
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
தூரம் தந்த துணிவு , அவ்வளவே!
உவலை - காய்ந்த இலைகள்
மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க
மண்ணோடு கலந்த மழை நீர்
பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட
பள்ளத்தாக்கின் மேலே ஒருபுறம்
அமைக்கப்பட்ட வேலியில் சாய்ந்து
அமைதியான இந்தக் காட்சியையும்
சலசலக்கும் இசையையும்
உள்வாங்கி ஒன்றித்துப் போன நான்
சர சர என்று
திடீரென்று அமைதியைச் சிதைத்த
ஓசையின் திசை திரும்பினேன்
உவலை கீழே நெளிந்து சென்ற
பாம்பு பார்த்தும் பதைக்கவில்லை
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
தூரம் தந்த துணிவு , அவ்வளவே!
உவலை - காய்ந்த இலைகள்