தி டெவில்'ஸ் அரித்மெடிக்

நான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும்? எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்? என்றோ நடந்ததை ஏன் ஆண்டு தோறும் பேசவேண்டும்? இப்படி எண்ணற்றக் கேள்விகள் ஹானாவின் உள்ளத்தில் குமுறின. வாதிட்டு அழுது அரற்றினாலும் தாயின் கட்டளைக்கிணங்கி  தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். தாத்தா வில், பாட்டி பெல், வில்லின் தங்கை, ஆன்ட் ஈவா, தம்பி ஆரோன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தா வில் தொலைக்காட்சியில் பழைய காட்சிகளை ஓடவிட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஏன் பார்க்க வேண்டும்? ஏன் திட்ட வேண்டும்? ஹானாவிற்கு எரிச்சலாக இருந்தது.

வல்லினச் சிறகுகள் -அக்டோபர் 2020


 வல்லினச் சிறகுகள் அக்டோபர் 2020 இல் என்னுடைய இரு கவிதைகளும், சாதனைப் பெண் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியுடன் என் நேர்காணலும்.

அறம் தள்ளுதல் மறமோ


பிரதிலிபியில் இக்கவிதை. 

இக்கவிதையின் ஆங்கில ஆக்கத்தையும் என்னுடைய ஆங்கிலத் தளத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நன்றி.



ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்


 

முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், அக்டோபர் 4ஆம் நாள், அவருடைய மகனார் முனைவர் திரு.பாட்டழகன் அவர்களால், பன்னாட்டுக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிக்கப்பட்டது. 'தமிழே எங்கள் தலைமை' என்ற முதன்மைத் தலைப்பில் சிறப்பாக நிகழ்ந்த  இக்கவியரங்கில் நான்கு அமர்வுகளில், 12 துணைத்தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டக் கவிஞர்கள் உலகெங்குமிருந்து கவிதைகள்  வாசிக்க,  ஏறக்குறைய 8 மணிநேரம் நடந்து சாதனைக் கவியரங்கமாகவே அமைந்தது. 

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...