'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்

 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின்  'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.

திரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை



திருவாரூர் திரு.வி.க.கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைப்பு: 'நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?' என் உபதலைப்பு: 'காடு' கவியரங்கத் தலைவர்: Na. Muthunilavan | நா. முத்துநிலவன் 12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் .

நான் மட்டும் மாறியிருக்கிறேன்


சடசடத்துப் பெய்யும் மழையும்
பட்பட்டென்று மறையும் குமிழும்
காற்றிலாடும் மரங்களும்
அவற்றில் ஆடும் இலைகளும்

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...