சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காட்டுத்தீ


காட்டுத்தீ... காட்டுத்தீ
எங்கோ என்று செய்திவரும்
ஐயோ!
மரங்கள்..!! மிருகங்கள்!!
பறவைகள் பறந்திருக்குமா?!!
மோதிடும்  எண்ண அலைகள்!

ஆனால் இன்று?
சென்றமாதம் மலையேறி
வியந்து ரசித்த
காடழிவதின் வெப்பம்
கண்ணில் உணர்கிறேன்
எரிச்சலும் புகைமூட்டமுமாய்!

உள்ளதில் நீயுமடா



காடழித்துக் கானகம் நாடாக்கி
நாகரிக மனிதன் நானென்று  
மார்தட்டி மயங்கும் மனிதா பார்
மார்புவற்றிப் பூமித்தாய் தவிப்பதை

மனித இனம் இருந்தால்தானே?

நேற்று
உலக சிட்டுக்குருவி தினம்
இன்று
உலக வன தினம்
நாளை
உலக தண்ணீர் தினம்

அடுத்த மாதம்
உலக பூமி தினம் (ஏப்ரல் 22)
அடுத்து
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5)
அடுத்து
உலக புலிகள் தினம் (ஜூலை 29)


எத்தனை தினம் வேண்டும்
மனிதா நீ உணர?
இந்நிலை தொடர்ந்தால்
'உலக மனிதர் தினம்'..?...
இல்லையில்லை
அப்படியொன்றைக் கொண்டாட
மனிதஇனம் இருந்தால்தானே?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.