சமைத்துக் கட்டி அனுப்பிவிட்டு
துலக்கித் தொட்டித் துடைத்துவிட்டு
பெருக்கிக் கூட்டித் துடைத்துவிட்டு
அசதி என்று ஒரு தேநீர் குடித்தால்....
பளிங்குத் தொட்டியில் மீண்டும்
துலங்க ஒரு கோப்பை!!
பின் குறிப்பு:
இக்கவிதை லேசான மனநிலையிலேயே எழுதப்பட்டது..வருத்தமோ எரிச்சலோ இல்லை :) வாழ்க்கை என்றால் உணவு வேண்டும், உணவு என்றால் பாத்திரம் கழுவவும் வேண்டும் :)))