பொன்னியின் செல்வன், என் பொன்னியின் செல்வன்

 பொன்னியின் செல்வன் - இந்தச் சொற்றொடரில் தான் எத்துனை வலிமை! எத்துனை இனிமை! வன்வாள் பாய்ந்தது தேனிமை நிறைந்தது என்று சொல்லலாம்!

இந்தச் சொற்றொடர் மனம்கவர் பெயர் மட்டுமல்ல, காலம் கவர் கால உந்தி!
ஏரியின் அழகை இரசித்துக்கொண்டே குதிரையில் வரும் இளைஞனின் எண்ண ஓட்டங்கள் சுழலாய் உள்ளிழுக்கும்! ஆனால், மூச்சுத்திணராமல் பல சுழல்களுக்குள் பயணிக்கவைக்கும்! குளிர் சோலைகளைக் காட்டும், சிலிர் சதிகளையும் காட்டும்!

தனிப்பயன் அரங்கு - கணையாழி இதழில்

கணையாழி ஜுன் இதழில் வெளியான என் கவிதை. 
இயற்கையுடன் உரையாடினால் கவிமுத்துகளைப் பரிசளிக்கும்.  


 



பெருமிதப் பதக்கம் பாரதி

பாரதி உன்னை உலகம் 
    பாடுது நித்தம் போற்றி
பாரதி பாட்டைப் பாட 
    போட்டியும் எங்கும் காண்பீர்
ஆரமும் நீயே ஆனாய் 
    பெருமிதப் பதக்கம் யார்க்கும்
தூரிய நோக்கம் கொண்டாய் 
    தரணியில் என்றும் வாழ்வாய் 

மகளிர் மேன்மையில் - சுதந்திரம் என்னும் வேள்வித் தீ


 

'சுதந்திரம் என்னும் வேள்வித்தீ' என்ற பொதுத் தலைப்பில் 'மகளிர் மேன்மையில்' என்ற துணைத் தலைப்பில் என் கவியரங்கக்கவிதை. மகளிர் மேன்மை இயல்பானால் மற்றவையும் மேன்மை பெறும். மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி தலைமையில் கவிபாடியது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கும் தில்லி கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி.


பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிந்தால் மகிழ்வேன். நன்றி.


பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...