சுட்டெரிக்கும் வெயிலில்
சூளையில் வெந்துவிட்டும்
பட்டாசு ஓட்டிப்
பகலெல்லாம் தேய்ந்துவிட்டும்
கட்டிடமும் ஓங்கவே
கல்சுமந்து ஓய்ந்துவிட்டும்
தட்டுகள் டம்பளர்கள்
தண்ணீரில் சுத்தமாக்கி
முட்டிநிற்கும் கண்ணீரை
மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து
எட்டத்தான் பார்க்கிறோம்
எம்வாழ்வில் ஓங்கிடமே
திட்டம்தான் வெல்லுமா
தீபத்தின் ஒளியில்!