தீபத்தின் ஒளியில்



சுட்டெரிக்கும் வெயிலில்
         சூளையில் வெந்துவிட்டும்
பட்டாசு ஓட்டிப்
          பகலெல்லாம் தேய்ந்துவிட்டும்
கட்டிடமும் ஓங்கவே
          கல்சுமந்து ஓய்ந்துவிட்டும்
தட்டுகள் டம்பளர்கள்
           தண்ணீரில் சுத்தமாக்கி
முட்டிநிற்கும்  கண்ணீரை
           மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து
எட்டத்தான் பார்க்கிறோம்
           எம்வாழ்வில் ஓங்கிடமே
திட்டம்தான் வெல்லுமா
           தீபத்தின் ஒளியில்!



தேர்தல் நாள்


தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.

வறுமை இருக்கலாம் 
வறட்சி இருக்கலாம் 
ஆனால் 
ஒரு நாள் சோறு உதவாது..

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...