உழவாலன்றோ...


உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!

எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!

இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்

உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள்  கதிரவனை!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

தோழியே தமிழே

தோழியே தமிழே கேளு,   
   தோட்டமே செய்தாய் பாரு! 
வாழிய தமிழே கேளு,
   வானமாய் விரிதல் பாரு! 
ஆழியே போலும் ஆசை 
   ஆட்கொளத் திறந்த பூவே! 
வாழிய எனவே உன்னால் 
   வாசனைப் பொழிதல் பாரு! 
2012 ஜுலையில்  துவங்கிய இந்த வலைப்பூவின் முந்நூறாவது பதிவு இது!
(அதற்கு முந்தைய தேதிகளில் இருக்கும் பதிவுகள் என் ஆங்கிலத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை.)


என் தளம் வந்து கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!







பிற்சேர்க்கை:
'முன்னூறாவது பதிவு' என்று தட்டச்சு செய்தவுடன், பார்க்கும்பொழுதே ஏதோ சரியாக இல்லையோ என்று தோன்றியது..இருந்தாலும் ரொம்ப யோசிக்காமல் விட்டுவிட்டேன்..
"முன்னூறு என்பது தவறு முந்நூறு (மூன்று x நூறு என்பது அப்படித்தான் வரும்) “முன்னூறு தந்தேன் “என்றால், “முன்பொருமுறை தந்த நூறு“ என்று பொருளாகும்." என்று முத்துநிலவன் அண்ணா அன்புடன் தெளிவு படுத்திவிட்டார்கள்...அதன்படி என் பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். இங்கேயும் சொன்னால், படிக்கும் அனைவருக்கும் தெரியுமே என்று சேர்க்கிறேன். முத்துநிலவன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்! (மேலே உள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் :) )

படங்கள்:நன்றி கூகிள் 

உடல் - உட்புறம் பார்ப்போமா

என் மூத்த மகனுக்கு, தற்பொழுது பத்து வயது, உடற்கூறு அமைப்பில் (Anatomy) ஆர்வம் உன்டு. தி ஹுமன் என்சைக்ளோபீடியா (The Human Encyclopedia) என்ற நூலை கடந்த வருடம் வாசித்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

Bodies the Exhibit என்ற உடல் உறுப்புகளின் காட்சியகம் புதிதாக வந்திருக்கிறது என்று அறிந்தோம்.

துளிர் விடும் விதைகள் - திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையில்

எனது எண்ணங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் என்னுடைய 'துளிர் விடும் விதைகள்' நூலைப் படித்து தன் தளத்தில் அறிமுகம் செய்துள்ளார். தனக்குப் பிடித்த கவிதைகளைச் சொல்லி, அருமையானதொரு எம்.ஜி.ஆர். பாடலையும் இணைத்துப் பகிர்ந்திருக்கிறார்..

செருக்கில்லாதோர் துணை

புதுவருடம்!! இனிப்பு கொடுத்தால் மகிழ்ச்சிதானே? இனிப்புடன் துவங்குவோம் இவ்வருடத்தை என்று இதோ வந்துவிட்டேன், ஒன்றுக்கு மூன்று இனிப்புகளுடன், உங்களுக்காக...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...