பாரதியார் பிறந்த நாள் - வெண்பா
மகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க!
நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ? மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ?
தமிழகம் கண்ட பெண் ஆளுமை
தமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா
புத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும்
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா!
புத்தக வாசனை பிடித்து
வாங்கி படித்து
வாழ்வில் சிந்தித்து
உயர்ந்திடவே
புறப்படுங்கள்
புத்தகத் திருவிழாவிற்கு!
நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்!
விதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி!
அட..நீங்கள் வேறு! Olympics memes
Image:Thanks Google |
படிபடி என்பார்
பச்சைக் குழந்தையைப்
பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார்
பாடமென்றால்
கணிதமும் அறிவியலும் தான்
கணித மேதையோ
அறிவியல் மேதையோ
அதிகம் இல்லை
சல்லடை போட்டுத் தேடிடுவோம்
பாதகமில்லை!
பள்ளிதாண்டியும் வகுப்பு
அதிலும்
முன்னால் நிற்கும் படிப்பு
ஓடாதே...ஆடாதே..
கவனமாய்ப் படி என்பார்
ஒப்பித்து ஒப்பித்து
ஒப்பேத்தும் நிலையில் ...
திடீரென்று கூவுகிறார்
ஒலிம்பிக் ஒலிம்பிக்
தங்கம் இல்லையாம்..
பதக்கம் இல்லையாம்..
அட..நீங்கள்வேறு..
அதெல்லாம் வருத்திடுமா?
இந்த நகைச்சுவைத் திறமை
யாருக்கும் வராது!
சிரிப்பாய்ச் சிரிக்கிறார்
கண்ணாடி முன்னிருப்பது உணராமல்..
ஒலிம்பிக் ..
அங்குபோனவர் பட்ட பாடு
அப்பப்பா யாருக்குத் தெரியும்?
அதைத் தெரிந்து
அதற்குக் குரல் கொடுத்தால் ...
அட..நீங்கள் வேறு!
தீபத்தின் ஒளியில்
சுட்டெரிக்கும் வெயிலில்
சூளையில் வெந்துவிட்டும்
பட்டாசு ஓட்டிப்
பகலெல்லாம் தேய்ந்துவிட்டும்
கட்டிடமும் ஓங்கவே
கல்சுமந்து ஓய்ந்துவிட்டும்
தட்டுகள் டம்பளர்கள்
தண்ணீரில் சுத்தமாக்கி
முட்டிநிற்கும் கண்ணீரை
மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து
எட்டத்தான் பார்க்கிறோம்
எம்வாழ்வில் ஓங்கிடமே
திட்டம்தான் வெல்லுமா
தீபத்தின் ஒளியில்!
தேர்தல் நாள்
தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.
வறுமை இருக்கலாம்
வறட்சி இருக்கலாம்
ஆனால்
ஒரு நாள் சோறு உதவாது..
நாசி ஹோலோகாஸ்ட் - 1
ஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன்? ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்? இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்?
அது 1938 ஆம் ஆண்டு! ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப் பார்க்கவும் முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.
அட்லாண்டாவில் வில்லியம் ப்ரீமன் ஜூவிஷ் ஹெரிடேஜ் அண்ட் ஹாலோகாஸ்ட் மியூசியம் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் நாசி ஆதிக்கத்தில் யூதர்களுக்கு ஏற்பட்டக் கொடுமையை, இனப்படுகொலையைப் பற்றிப் பல தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கத் தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அதை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லவும் முயற்சி செய்கின்றனர். நேரில் பார்த்த சாட்சிகள் உயிருடன் இருக்கும் இக்காலத்திலேயே ஹாலோகாஸ்ட் (holocaust) நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள் இருப்பதால் உண்மையைப் பரப்புவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக திருமிகு. ஹென்றி பெர்ன்ப்ரே மியூசியம் வந்திருந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மூத்தவனின் ஆசிரியர் சொன்னதாகச் சொல்லிப் போக வேண்டும் என்று அவன் சொன்னதால் எங்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.
ஹென்றி அவர்களின் வார்த்தையில், "நானும் என் தந்தை தாயும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தோம். என் தந்தை என் தாயின் இரண்டாவது கணவர். முதல் கணவரும் என் தாயின் மூன்று சகோதரர்களும் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து உயிர் துறந்திருந்தனர். ஒரு பிள்ளையும் இறந்து போயிருந்தான். போரிற்குப் பிறகு என் தந்தையும் தாயும் சந்தித்து மணந்து கொண்டனர். என் தந்தையும் முதல் உலகப் போரில் படைவீரராக இருந்தவர்தான். அந்தச் சூழ்நிலையில், நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபொழுது ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். உடனே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தெருவெங்கும் சீருடை அணிந்த படைவீரர்கள் அணிவகுத்தார்கள். கடுமையான சட்டதிட்டங்கள் அமலாக்கப்பட்டன. ஒரு நாள் கடைக்குச் சென்ற என் தந்தை திரும்பிவரவில்லை. நானும் என் தாயும் பரிதவித்துத் தேடினோம், பயனில்லை. மூன்று நாட்கள் கழித்து என் தந்தை வந்தார். கடையில் அரசுக்கு எதிராக அவர் ஏதோ சொன்னதால் படைவிரர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்களாம். மீண்டும் அவ்வாறு பேசினால் கான்சென்ட்ரேசன் காம்ப்பிற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்து அனுப்பினார்களாம்."
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் கான்சென்ட்ரேசன் காம்ப்புகள் அமைக்கத் துவங்கிவிட்டார்களாம் நாசிப் படையினர். யூத இனத்தவருக்கு என்று இல்லாமல் அரசை எதிர்த்துப் பேசும் எவருக்கும் கான்சென்ட்ரேசன் காம்ப் என்றுதான் துவங்கியதாம்.
யூத மக்களை நசுக்கும் விதமாக முதலில் யூத கடைகளுக்கு மக்கள் போகக் கூடாதென்று சொன்னார்களாம். மீறிச்சென்றவர்கள் சுடப்பட்டனர். இப்படி யூதர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.
| ||
"நாசி அதிகாரத்தில் மக்கள் ஒருவரை ஒருவரை வெறுக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். கொலை செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். யூதமக்கள் வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கேள்வியின்றி விசாரனையின்றிக் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஜெர்மன் மக்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள். எங்குமே நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான் இருப்பார்கள். பொதுவாகக் குறைகூறிவிட முடியாது" என்கிறார் ஹென்றி.
ஜெர்மனியில் நாசி அதிகாரத்தில் இப்படி அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்ற சிறுவர்களைத் சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துச் சென்று விடுதிகளில் வளர்த்தார்களாம். ஹென்றி அவ்வாறு அலபாமாவில் இருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கும் வாழ்க்கை அவருக்கு எளிதாக இல்லை. நிறவெறி பிடித்த வெள்ளையருக்கு யூத இனத்தவரையும் பிடிக்கவில்லை. மேலும் ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களைச் சந்தேகத்துடனே எதிரியாகத்தான் பார்த்தார்களாம். அருகிருந்த தபால் அலுவலகத்தில் மாதமொருமுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம்.
| ||
ஹென்றி அவர்கள் 1944இல் அமெரிக்கப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி சென்று அங்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறார். "1945இல் நார்மண்டி படையெடுப்பில் (Normandy invasion) வெற்றியடைந்து ஜெர்மனி உள்ளே முன்னேறிச் சென்ற நாங்கள் ஒரு புகைவண்டிப் பெட்டியைப் பார்த்தோம். அதில் 60-70 யூத மக்களின் உடல்கள் இருந்தன. மனித உடல்கள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு எழும்பும் தோலுமாக இருந்தன. ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை நெஞ்சை அடைத்தது. இரண்டு நாட்கள் கழித்து சாலையோரம் பல மைல்கள் தூரத்திற்கு யூதமக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தன. தோற்கப் போகிறோம் என்ற நிலையில் சாலையோரம் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்" என்று சொன்ன ஹென்றி அவர்களின் குரலில் இன்றும் வேதனை தெரிகிறது. எப்பொழுதும் நீங்காத வேதனை!
| |||
மியூசியத்தை வடிவமைத்தக் கட்டிடக்கலைஞர் அன்று ஜெர்மனியில் இருந்த நிலையைக் காண்பிக்கும் விதமாகச் செய்திருக்கிறார். "நாசி அதிகாரத் துவக்கத்தில் ஜெர்மனியில் இருந்து தப்பிச்செல்வதற்கு வழிகள் இருந்தன. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் நாடுகள் தயாராக இல்லை" என்கிறார் ஹென்றி. போகப் போக வழிகள் அடைக்கப்பட்டு இறுதியில் தப்பிச்செல்லவே முடியாதபடி ஆகிவிட்டது. அதைச் சொல்லும் விதமாக மியூசியத்தில் சன்னல்கள் படிப்படியாகக் குறைந்து அமைக்கப்பட்டுள்ளது.
"2005இல் கனடாவில் இரண்டாம் உலகப் போரில் இருந்த ஜெர்மானியப் படைவீரரைச் சந்தித்தேன். அவர் விமானப் படையில் இருந்திருக்கிறார். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்பொழுது அவர் ஹோலோகாஸ்ட் என்று ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்னார். நேரில் பார்த்து நொறுங்கிய என்னிடமே இப்படிச் சொல்வார்களேயானால் நாளை என்ன ஆகும்?" என்கிறார் ஹென்றி.
கடைசிப்படத்தில் உள்ளச் சுவற்றில் ஓட்டை தெரிகிறதல்லவா? யூத மக்கள் போதிய உணவின்றி அடைக்கப் பட்டிருந்த இடங்களில் இருந்து சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து, சுவரில் துளையிட்டுச் சென்று சாக்கடை வழியாகச் சென்று எங்காவது உணவு கிடைத்தால் எடுத்துவருவார்களாம். நாசிப் படையினர் கண்ணில் பட்டுவிட்டால் தோட்டா தான்.
| ||
நாசி எதிர்ப்பாளரான ஜெர்மானியர் ரெவ்.மார்டின் நிமோலர் (Rev.Martin Niemoller, Anti-Nazist) அவர்களின் அதிகம் மேற்கோள் காட்டப்படும் புகழ்பெற்ற வரிகள்:
"முதலில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக வந்தனர். அப்பொழுது நான் எதிர்த்துப் பேசவில்லை, ஏனென்றால் நான் பொதுவுடைமைவாதியல்ல.
அடுத்தது, வணிகச்சங்கத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்தனர். அப்பொழுதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் வணிகச்சங்கத்தவன் அல்ல.
அடுத்தது யூதருக்கு எதிராக வந்தபொழுதும் நான் யூதர் அல்லவென்று வாய் மூடி இருந்தேன்.
கடைசியில் எனக்கு எதிராக வந்தபொழுது எனக்காகப் பேச ஒருவரும் இல்லை"
(இந்த மேற்கோள் பல எண்ண அலைகளை உருவாக்குகிறது)
தகவலுக்கு ஒரு இணைப்பு:
நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே
தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச்
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும்
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே
தந்துலகில் எண்பிப்பாள் தாய்
திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.
போதை மருந்து..பள்ளிகள்..பலிகள்
ஹெரோயின் போதை மருந்து தாராளமாகப் புழங்கி வந்ததும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிமையானதும், பல இளைஞர்கள் இதனால் உயிர் இழந்திருப்பதும் வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் போதை மருந்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள் இதை வெளிகொணர்ந்துள்ள செய்தியாளர்கள், 4000% அதிகரித்திருக்கிறதாம்!! கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு முக்கோணப் பகுதியில் (மிகுந்திருக்கும் போதை மருந்து புழக்கம் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளிவந்து பெற்றோரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
தொடரும் தொடர் பதிவர்கள்
பதிவர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு தனித்துவம்! சிலரைத் தொடரலாம், பலரை அறியாமல் இருக்கலாம். நாம் அறிந்தவரை பலரை அறியாதவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் பலரை அறியாமல் இருப்பது சிலரை அறியாமல் இருப்பதாகக் குறையும் அல்லவா? குழப்ப வேண்டும் என்று நினைத்துக் குழப்பவில்லை, குழப்பவில்லை என்று சொல்லிக் குழப்பவும் இல்லை. குழம்பிக் கிளம்பிப் போய்விடாமல் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று விழைந்து விளம்புகிறேன். வாசியுங்கள், நான் குழப்பாமல் கிளம்புகிறேன்.
கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? - உலக மகளிர் நாள் 2016
மார்ச் 8 - சர்வதேச மகளிர் நாள்! இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்'! பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைக்கும் சர்வதேச பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் நாள். பெண்களை மதிக்கும் சமமாகப் பாவிக்கும் சமூகம் முழுவதுமாக அமையவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். நிறுவனங்களில் உயர்பதவிகளில் பெண்கள் இருப்பது குறைவாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள், அவற்றை அலசி ஆராய்ந்தால் பெண் சமூகம் போராட வேண்டியிருப்பது அதிகம் என்று புரியும். முன்னோடிகளாயிருந்து வரலாற்றில் புதையுண்ட சில பெண்மணிகளைப் பற்றி பகிர்வதே இப்பதிவின் நோக்கம். அவர்களுக்கும் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின அர்ப்பணிப்பாகவும் சிந்தனை தூண்டும் சிறு தீபமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
விடுதலைப் பயணம் Freedom March
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
4. ஜான் லூயிஸ்
5. செங்குருதி ஞாயிறு
மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள் வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
4. ஜான் லூயிஸ்
5. செங்குருதி ஞாயிறு
![]() |
Image:thanks Google |
மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள் வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.
செங்குருதி ஞாயிறு
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
4. ஜான் லூயிஸ்
எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத் தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.
ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும் எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.
ஜிம்மி லீ ஜாக்சன்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.
1.செல்மா
2.மாரியன்
விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...