நானாக நான் இருத்தல்

அவளைப் போல ஆடு
இவனைப் போலப் பாடு

அவனைப் போலப் படி
இவளைப் போல விளையாடு

அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்

விளங்காமல் விழித்தக் குழந்தை
விளம்பியது  விழி விரித்து

நானாக நான் இருத்தல் எப்பொழுது
நானாக நான் இருத்தல் பிழையா?

38 கருத்துகள்:

  1. பல குழந்தைகளின் நிலை இன்று இதுதான்...

    அழகான கவிதை கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்தவேண்டிய உண்மை..
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெற்றிவேல்!

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாம், பல வாசனை நுகராமல் ஒன்றை மட்டுமா பாராட்டுவது!!!!
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சீனி!

      நீக்கு
  3. கலக்கல் கிரேஸ்.. நச்சுனு கேட்டிங்க

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. கண்டிப்பாக திரு.தனபாலன்! எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      நீக்கு
  5. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ஒரு பதிவைப் படித்து ரசித்து விட்டு பறந்து வந்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  6. ஒப்பீட்டு பார்த்தே பழகிவிட்டது உலகம்...
    உழைப்பால் உயர்ந்து ஒப்பீட்டாளாராக நாம் வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  7. அருமையானதோர் கேள்வி !!! அனைவரும் உணர்ந்து திருந்தும் நாள் எந்நாளோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்நாள் விரைவில் வர வேண்டும்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ்முகில்!

      நீக்கு
  8. காலம் முழுவதும் ஒப்பீட்டினிலேயே நாம் வாழ்ந்துகொண்டே இருக்கின்றோம்..
    அது ஒரு தொடர்கதை..

    எப்பொழுது நாம் நாமாக வாழமுயல்கிறோமோ அன்றோடு ஒப்பீடும் தொலையும்...
    நல்ல கவிதை! அருமையான கருத்து.. வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஒப்பீடு இல்லாமல் அவரவர் தத்தம் திறமைகளை வளர்த்து வாழ்ந்தால் நலம். அதற்கு சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இளமதி!

      நீக்கு
  9. இன்றைய நிலையை அருமையாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.. பெற்றோர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பெற்றோரும் மாறவேண்டும் சமூகமும் மாற வேண்டும்.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா!

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஆமாம் என்று நினைக்கிறேன்...உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவியாழி அவர்களே

      நீக்கு
  11. சில வீடுகளில் குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க விடுகிறார்கள். ஆனால் அதனால் பெரிய மாற்றம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. சரியான மனப்பாங்கு என்னவென்றால், குழந்தைகளின் ஒத்துழைப்போடு அவர்களை நம் வழிக்குத் திருப்புவது தான். (provided 'நம் வழி' is correct). - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.செல்லப்பா.
      குழந்தைகள் தவறினால் திருத்தவேண்டும்..ஆனால் அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதை ஊக்குவிக்க வேண்டும். நம் வழிக்குத் திருப்புவது என்பது சரியில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  12. வணக்கம்
    நல்ல கேள்விகளை தொடுத்து கவிதை அமைந்த விதம் மிகமிக அருமை வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல்முறை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக ரூபன்..தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி!
      உங்கள் வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  13. அருமையான கவிதை.. ஒப்பீடு பழகிவிட்டது உலகம்..

    பதிலளிநீக்கு
  14. நானாக நான் இருத்தல் எப்பொழுது
    நானாக நான் இருத்தல் பிழையா?

    நாம் நாமாகவே இருப்போம் .. மற்றவரைப்போல் அல்ல...
    நல்ல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்! பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி!

      நீக்கு
  15. இன்று வலைச்சரத்தில் தங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கேன். வருக.
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html?showComment=1381289857959#c6032878679408769451

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகுந்த உவகையுடன் உள்ளம் மிகுந்த நன்றிகள் சசிகலா! அறிமுகம் பார்த்து வந்தேன், உங்களுக்கே உரித்தான புதுமையான முறையில் அறிமுகம்! :)

      நீக்கு
  16. நான் நானாக இருப்பது எப்போது? நல்ல கேள்வி!
    எங்கள் பள்ளியின் மேலாளர் சொல்வார்: 'குழந்தைகளுக்கு ரோல்-மாடல் என்று யாரையும் காட்டாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி பண்பு இருக்கும். அதை வளர்த்து கொள்ள உதவுங்கள்' என்று.

    வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு உவந்தேன் ரஞ்சனி அம்மா! உங்கள் மேலாளர் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். பகிர்ந்ததற்கும் பாராட்டியதற்கும் பல நன்றிகள் அம்மா!

      நீக்கு
  17. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. நானாக நான் இருத்தல் எப்போது ..?

    அவசியமான கேள்வி
    அழகிய கவிதை /ஆழமான கருத்து

    வாழ்த்துக்கள்
    வலைச்சர அறிமுகம் தந்த தென்றலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சசிகலாவிற்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.
    உங்கள் மனமார்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீராளன்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...