காண்பது பொய்யென

பனியும் பரிதியும் போட்டி உறையும்
தண்ணீர் உரைத்திடும் முடிவு 



Image:thanks Google


தங்கமாய்ச் சூரியன் என்று மயங்கியே
தங்கமே போகாதே நீவெளியே - காண்பது
பொய்யென மேனி உறைந்தபின் கூவிடு
மெய்ப்பொருள் காண்ப தறிவு 

Image:thanks Google

Image:thanks Google

37 கருத்துகள்:

  1. அருமை சகோ!

    உங்கள் ஊரில் -3 யா? பனிவிழும் மலர்வனம்???!!!! அட்லாண்டா அட லாண்டா என்று இருக்கிறதா..ஹஹ்ஹ்ஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.

      ஹாஹா ஆமாம், மலர்வனமெல்லாம் போயே போச்சு..its gone போயிந்தே :))). அதிகபட்சம் 2C, -8 வரை என்று போகிறது..
      சர்ச்சில் ஒரு 80 வயது பாட்டி, "What's happening here? I grew up warm in the south. Now I should go to Hawaii" என்று அங்கலாய்த்தார், பாவம்.

      கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா :)

      நீக்கு
    2. பாவம் பாட்டி!!! அவரது வார்த்தைகளை ரசித்தாலும்....எல்சினோ வேலையாக இருக்குமோ...உலக வெப்பமடைதல் மாறிவருகின்றது...

      நீக்கு
    3. இந்த ஆண்டு எல்நினோ காரணம் என்றாலும் நீங்கள் சொல்வதுபோல் புவி வெப்பநிலையும் மாறிவருகிறது.
      மீள்வருகைக்கு நன்றி அண்ணா

      நீக்கு
  2. பனிவிழுதல் நடைமுறை வாழ்விற்குக் கொஞ்சம் கடினம்தான் என்றாலும் அழகாக இருக்கும் இல்லையோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா. மிக அழகாகப் பிரகாசிக்கும் :)

      இங்கு மைனஸ் என்றாலும் பனி விழவில்லை, because of no precipitation. ஆனால் நாளை எதிர்பார்க்கப்படுகிறது.

      நீக்கு
  3. அருமை ரசித்தேன் சகோ
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.

    மரபில் குறளும் நேரிசையும் கைகோர்த்தொரு பயணம்.

    எவ்வளவு இனிமை...!

    தொடருங்கள்.

    தொடர்கிறேன்.

    த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      ஆஹா! தேறி விட்டேனா? :) மகிழ்ச்சி அண்ணா.
      மரபில் எழுதத் தூண்டியதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
      மனமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு
  5. அருமை. தில்லியிலும் நல்ல குளிர் - பனிப்பொழிவு இருப்பதில்லை என்றாலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி குளிர் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அண்ணா.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  6. சகோதரியின் வெண்பாவிற்கு பாராட்டுக்கள். ஆசிரியர் ஜோசப் விஜூ(ஊமைக்கனவுகள்) அவர்களது நற்சான்றே கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.
      ஆமாம், பன்மடங்கு மகிழ்ச்சிதருவது இல்லையா ஐயா? :)
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  7. கவிதையையும் ரசித்தேன். துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.
      //துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்// நானும் :)

      நீக்கு
  8. அதிகாலைப்பனியில் வெளியில் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்!

    எனக்காக பாடப்பட்டதோ என சற்றே எண்ண வைத்துவிட்டது!

    அருமைத் தோழரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா சகோ? அமைதியான அழகான சூழல் அது. மகிழ்ச்சி சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  9. அருமையான குறுங்கவிதைகள்! இரண்டாவது மிகவும் பிடித்து இருந்தது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வெண்பாவில் அனுபவத்தை அழகாய் எழுதி விட்டீர்கள் அருமை

    பதிலளிநீக்கு
  11. படங்களும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் ’மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்’ என்ற பதிவு http://www.tnmurali.com/2012/02/blog-post_05.html தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். சென்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள்வருகைக்கும் என்னை நினைவில் வைத்துப் பகிர்ந்த பயனுள்ளப் பதிவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

      நீக்கு
  13. சரியாக சொன்னீங்க .. சூரியனை பார்த்து ஏமாந்த நாள் பல ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...