அழுவதா? சிரிப்பதா?

சொல்லப் போவதைக் கேள் என் அன்புத் தோழி!
பிள்ளைகளைக் கிளப்பி பள்ளியில் விட்டு வந்தேன்
பின் சுவையாகச் சமையலும் செய்தேன்
கறிகாய் வாங்க வேண்டுமே என்று கடைக்குச் சென்றுவிட்டு
பிள்ளையையும் அழைத்து கொண்டு வந்தேன் தோழி!
பகலவன் உச்சி தொட்டு  இறங்கவும் துவங்கி விட்டான்
உணவு உணவு என்று வயிறு தாளமிட 
சிட்டாய் அடுமனை சென்று தட்டை எடுத்தால்
குழம்பும் பொரியலும் நக்கலாய் நகைக்கின்றன
ஏனென்று பார்த்தேன் தோழி, விசயம் கேள்!
அழுத்தச் சமைகலம் வெண் பருக்கைகள் இன்றி
பளபள என்றே சிரித்தது - சோறு வைக்க மறந்திருக்கிறேன் தோழி!
என் செய்வேன்! அழுவதா சிரிப்பதா சொல்வாய் தோழி!




4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...