விடியற்காலை


கானப் பறவைகளின் இன்னிசை ராகங்கள்
அதனை ரசித்துக் கீச்சிடும் அணிலின் கீதங்கள் 
கதிரவனின் கதிர்க்கரங்கள் தீட்டியச் செந்நிற ஓவியங்கள்
தங்கத்தைக் கரைத்து கலந்தது போல் மின்னும் நீர்நிலைகள்
இலைகளிடம் பிரியாவிடை பெரும் பனித்துளிகள்
மரகதப் பசுமையாய் பட்டொளி வீசும் மலைகள் 
துள்ளிக் குதித்துப் புதிய நாளை வரவேற்கும் மான்கள்
அவற்றுடன் போட்டிப்போட்டுத் தவ்வும் முயல்கள் 
பூமியைச் சுறுசுறுப்பாக்கி எழிலாய் மின்னச்செய்து 
தன் பயணத்தைத் துரிதமாய்த் துவங்கி விட்டான் ஆதவன்!

1 கருத்து:

  1. அற்புதம்...//கதிரவனின் கதிர்க்கரங்கள் தீட்டியச் செந்நிற ஓவியங்கள்// அழகான கற்பனை :-)


    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...