விடியற்காலை


கானப் பறவைகளின் இன்னிசை ராகங்கள்
அதனை ரசித்துக் கீச்சிடும் அணிலின் கீதங்கள் 
கதிரவனின் கதிர்க்கரங்கள் தீட்டியச் செந்நிற ஓவியங்கள்
தங்கத்தைக் கரைத்து கலந்தது போல் மின்னும் நீர்நிலைகள்
இலைகளிடம் பிரியாவிடை பெரும் பனித்துளிகள்
மரகதப் பசுமையாய் பட்டொளி வீசும் மலைகள் 
துள்ளிக் குதித்துப் புதிய நாளை வரவேற்கும் மான்கள்
அவற்றுடன் போட்டிப்போட்டுத் தவ்வும் முயல்கள் 
பூமியைச் சுறுசுறுப்பாக்கி எழிலாய் மின்னச்செய்து 
தன் பயணத்தைத் துரிதமாய்த் துவங்கி விட்டான் ஆதவன்!

1 கருத்து:

  1. அற்புதம்...//கதிரவனின் கதிர்க்கரங்கள் தீட்டியச் செந்நிற ஓவியங்கள்// அழகான கற்பனை :-)


    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...