அறியாமையா இரக்கமின்மையா?

மூன்று வேளையும் நேரத்திற்கு அறுசுவை உணவு
இடையில் நினைத்தால் உண்ணப் பலவகைப் பதார்த்தம்
இவற்றை உண்ணப் போரடித்தால் பழங்களும் பாலும்
என்று வாழும் செல்வந்தன்

"பசி அதிகமாக இருக்கிறது, தயவு செய்து உணவு கொடுங்கள்"
என்று கேட்கும் ஏழை ஒருவனிடம்
"ஏதோ அதிகமாக இருக்கிறது என்கிறாயே,
நான் ஒன்றும் கொடுக்க முடியாது போ"

என்று சொன்னால்
அது அறியாமையா இரக்கமின்மையா?

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...