பெரும் பெயல் பின்னால்..

ஆழியிலிருந்து முகந்த நீரை சுமந்து
தொலை தூரம் பயணித்த முகில் திரள்
களைத்து கருத்ததால் சுமையிறக்க நினைந்து
ஒழிவின்றிப் பொழிந்த பெரும் பெயல்!

மணாளனின் ஒளிக்கரம் தழுவக் காத்திருந்து
சளைத்துக் கவிழ்ந்த சூரியகாந்தி இதழ்
களிப்பில் மலருமாறு மேகத்திரைப் பின்னிருந்து
ஒளி முகம் வெளிக்காட்டுகிறான் பகலவன்!

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.