ஈவது விலக்கேல்

அன்னம் இருபத்தி ஒன்று வயதான பட்டதாரிப் பெண். ஒரு தொழிற்சாலையில் பணி செய்து வந்தாள். இணை மேலாளராகப் பணி செய்த அவளுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. பெற்றோருடன் வசித்துவந்த அவள் தன்னுடைய சிறு செலவுகள் போக மீதியைச் சேமித்து வந்தாள். ஒரு நாள் வேலை விசயமாக ஓர் இடத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
ஒரு நிமிடத்தில், "அக்கா, செருப்புதான் போட்டுருக்கீங்களா? அதையே மெருகேற்றித் தருகிறேன், பாதி காசு தந்தால் போதும் அக்கா.", என்று அருகில் நின்ற ஒரு சிறுவன் சொன்னான். காலனியைச் சுத்தம் செய்து மெருகேற்றிக் கொடுத்துச் சம்பாதிக்கும் சிறுவன் அவன். பெயர் செல்வன். ம்ம்ம்...
மனதில் ஏதோ தோன்ற அன்னம் அந்தச் சிறுவனை அழைத்து, "நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். படிக்கிறாயா?" என்று கேட்டாள். அவனும் சில கேள்விகளுக்குப் பின்னர் சரி என்றான். அவன் தாயைச் சந்தித்த அன்னம் செல்வன் படிப்பதற்கு ஏற்ற ஏற்பாடு செய்தாள். மாதம் தோறும் செல்வனைச் சந்தித்துத் தேவையானதும் வாங்கிக் கொடுத்தாள். இரண்டு வருடம் ஓடிய பின்னர் ஒரு நாள் தொழிற்சாலை மூடப்பட்டது. வேலை இழந்த அன்னம் யோசித்தாள். செல்வன் படிப்புச் செலவை நிறுத்திவிடலாமா? என்று சிந்தித்தாள். "இல்லை, எனக்கு இன்னொரு வேலை தேடப்  படிப்பும் அறிவும் இருக்கின்றது, நான் படிக்க வைப்பதை நிறுத்திவிட்டால் செல்வன் மீண்டும் செருப்புத் துடைக்கச் சென்று,  முன்னேற முடியாமல் போய் விடுவான். தொடங்கிய நல்ல  காரியத்தை நிறுத்த வேண்டாம். சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். அவ்வை சொன்னதைப் பின்பற்றி ஈவதை விலக்க வேண்டாம்" என்று முடிவு எடுத்தாள். 'ஈவது விலக்கேல்' என்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்த அவள் பெற்றோரும் அதைத் தடுக்காமல் ஊக்குவித்தனர். செல்வன் இனிதே படிப்பைத் தொடர்ந்தான். அன்னத்துக்கும் வேறு நல்ல வேலை கிடைத்தது.

தேவையானவருக்குக் கொடுப்பதையும் உதவுவதையும் விலக்காமல் இருக்க வேண்டும். மற்றவர் செய்வதையும் தடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வையார் சொன்ன, வாழ்விற்குத் தேவையான மொழி இது. 

2 கருத்துகள்:

  1. கூற்றுக்கு ஏற்றக் கதை கிரேஸ்...தொடர்ந்து எழுதுங்க, என்றும் "எழுதுவது" விலக்கேல் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! ஹாஹா.... மேலே இருப்பவன் கொடுக்கும் வரை எழுதுவேன் :-)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...