நகரத்தில் அன்றும் இன்றும்

அன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
வானில் தன் தன் கூடு திரும்பும் பறவைக் கூட்டங்கள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இன்னிசைக் கீதங்கள்
இக்காட்சியைக் காண வானம் பார்க்கும் குழந்தைகள்

இன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
சாலையில் தன் தன் வீடு திரும்பும் ஊர்திகள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இரைச்சல்கள்
வானில் எப்பொழுதாவது பறக்கும்  ஒற்றைப் பறவை

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.