சுதந்திர தினம்

இந்த நாள்,
ஆண்டின் திங்கள் வரிசையில் ஓர் திங்கள்
திங்கள் நாட்களின் எண்களில்  ஓர் எண்
 ஞாயிறு திங்கள் வரிசையில் மற்றுமொரு தினம்
இதன் அடையாள முத்திரை ஆகஸ்டுப் பதினைந்து

இந்த நாள்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு
 வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தைப் பார்த்தது
பார்த்தது, அதனால் முக்கியத்துவம் தனக்கே பெற்றது
பாரத சுதந்திர தினம் என்ற பெருமையான பட்டம் பெற்றது

இந்த நாள்,
அயலானிடம், என் முன்னோர் காலம் காலமாய் வாழ்ந்த நாடு
செல்வமும் செழிப்பும் பெற்று சிறந்து விளங்கிய நாடு
பல கலை வளர்த்து பெருமை பெற்ற பாரத நல்ல நாடு
எமக்கே அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை என்று பறைசாற்றியது

இந்த நாள்,
மேலே சொன்ன விளக்கங்களினால் ஆண்டின் மற்றுமொரு தினம் அல்ல
பாட்டும் கூத்தும் வைத்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல
நாட்டின் நலனுக்கு சிந்திக்கவும் செயலாற்றவும் நினைவு படுத்தும் நாள்
சுதந்திர மேண்மையை உணர்ந்து காக்க சொல்லும் இனிய நாள்!

                                                         *******

சுதந்திரத்தின் அருமையை உணர்வோம், காப்போம், வாழ்வோம், மூதாதையர் இனிது வாழ்ந்த நாட்டை வரும் தலை முறையினருக்கு இனிதாய் கொடுப்போம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

3 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...