தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன் 
உன் பட்டுக் கன்னம் தொடும் வரை

விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன்
உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை

வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு என்று நினைத்திருந்தேன்
உன் புன்னகை பார்க்கும் வரை 

மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம் என்று நினைத்திருந்தேன் 
உன் தலை உச்சி நுகரும் வரை 

அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே என்று நினைத்திருந்தேன் 
உன்னைக் கருவில் தரிக்கும் வரை

படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம் என்று நினைத்திருந்தேன்
உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை 

வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு என்று நினைத்திருந்தேன்
உன் தாய் என்று ஆகும் வரை! 

3 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

  தமிழ் இனி தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ் அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ச...