தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன் 
உன் பட்டுக் கன்னம் தொடும் வரை

விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன்
உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை

வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு என்று நினைத்திருந்தேன்
உன் புன்னகை பார்க்கும் வரை 

மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம் என்று நினைத்திருந்தேன் 
உன் தலை உச்சி நுகரும் வரை 

அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே என்று நினைத்திருந்தேன் 
உன்னைக் கருவில் தரிக்கும் வரை

படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம் என்று நினைத்திருந்தேன்
உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை 

வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு என்று நினைத்திருந்தேன்
உன் தாய் என்று ஆகும் வரை! 

3 கருத்துகள்:

  1. அருமை அருமை
    சீரான சிந்தனையுடன் கூடிய படைப்பு
    மனம் கவர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தாய்மையின் பெருமையை அழகாக விளக்கும் உங்கள் கவிதை அருமை :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...