நகரத்தில் அன்றும் இன்றும்

அன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
வானில் தன் தன் கூடு திரும்பும் பறவைக் கூட்டங்கள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இன்னிசைக் கீதங்கள்
இக்காட்சியைக் காண வானம் பார்க்கும் குழந்தைகள்

இன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
சாலையில் தன் தன் வீடு திரும்பும் ஊர்திகள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இரைச்சல்கள்
வானில் எப்பொழுதாவது பறக்கும்  ஒற்றைப் பறவை

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

   ஐங்குறுநூறு  252 குன்றக் குறவன் புல்வேய் குடிலை  மன்று ஆடும் இளமுகில் மறைக்கும்  அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்   தோழி, அவன் வாழி!  விரையும்...