வாராதோ முற்று

உலகில் கேட்கும் புற்றுநோய் செய்திகள் மனதை உலுக்க, ஆட்கொல்லி நோய்க்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கத்துடன்  புற்றுநோயால் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்.


என்னை வசப்படுத்தி

கிடைத்தப் பொழுதில் குசியாய் அமர்ந்தேன்
புடைத்ததோர் சீரியப் புத்தகம் தூக்கி
இருபக்கம் வாசித்த வேளை 
அருகினில் வந்தாய் அழகாய்க் கவர்ந்தே 


இணையக்கல்வி - பகுதி 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவுகள், இணையக் கல்வி - பகுதி 1 
இணையக்கல்வி - பகுதி 2.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.

மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்




இணையக்கல்வி - பகுதி 2

இணையக்கல்வி - பகுதி 1 பதிவில் இணையக் கல்வி பற்றி எழுதியிருந்தேன். இப்பதிவில் அது பள்ளிகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.


என் இளைய மகனுக்கு (Kindergarten) பெரென்ஸ்டைன் பியர்ஸ் (Berenstain Bears) என்ற புத்தகங்கள் பிடிக்கும்.

இணையக்கல்வி - பகுதி 1

புத்தகம், குறிப்பேடு என்று இல்லாமல் இணையவழிக் கல்வி என்பது சரியா தவறா? அதுதான் எதிர்காலமா? எல்லாம் டெக்னாலஜிமயம் தான். அதற்காகப் பிள்ளைகளுக்கு அனைத்தையும் சிறுவயதிலேயே கொடுக்கவேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுவதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.