தனிப்பயன் அரங்கு - கணையாழி இதழில்

கணையாழி ஜுன் இதழில் வெளியான என் கவிதை. 
இயற்கையுடன் உரையாடினால் கவிமுத்துகளைப் பரிசளிக்கும்.  


 



பெருமிதப் பதக்கம் பாரதி

பாரதி உன்னை உலகம் 
    பாடுது நித்தம் போற்றி
பாரதி பாட்டைப் பாட 
    போட்டியும் எங்கும் காண்பீர்
ஆரமும் நீயே ஆனாய் 
    பெருமிதப் பதக்கம் யார்க்கும்
தூரிய நோக்கம் கொண்டாய் 
    தரணியில் என்றும் வாழ்வாய் 

மகளிர் மேன்மையில் - சுதந்திரம் என்னும் வேள்வித் தீ


 

'சுதந்திரம் என்னும் வேள்வித்தீ' என்ற பொதுத் தலைப்பில் 'மகளிர் மேன்மையில்' என்ற துணைத் தலைப்பில் என் கவியரங்கக்கவிதை. மகளிர் மேன்மை இயல்பானால் மற்றவையும் மேன்மை பெறும். மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி தலைமையில் கவிபாடியது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கும் தில்லி கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி.


பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிந்தால் மகிழ்வேன். நன்றி.


ஐங்குறுநூறு 402 - யாழிசை இல்லறம்

 


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து  இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். 

சாயாவனம், சா.கந்தசாமி - நூலறிமுகம்

 சாயாவனம் நூல் அறிமுகம் 



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

காணொளியைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி .

ஐங்குறுநூறு 201 - என்ன மரமது சொல்வாய்


"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், What tree is it my friend.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.