ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?
| நன்றி: இணையம் |
இதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக் குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண்டும் என்று தலைக்குத் தலை போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.
மூளையின் கதை - பாகம் 2
மனிதன் ஹோமினிட் என்று வழங்கப்படும் உயிரினத் தொகுதியைச் சேர்ந்தவன். இத்தொகுதி மனிதன் மற்றும் குரங்கு சேர்ந்த தொகுதியாகும். இத்தொகுதியின் பரிணாம வளர்ச்சியைப் படித்தால் கடந்த இருபது இலட்சம் (இரண்டு மில்லியன்) ஆண்டுகளில் மூளை மூன்று மடங்கு பெரிதாகியிருக்கிறதாம். மூளையில் சுருக்கங்களும் மடிப்புகளும் ஏன் வந்தன?
மூளையின் கதை - பாகம் 1
அட்லாண்டாவில் உள்ள பெர்ன்பன்க் அருங்காட்சியகம் (Fernbank Museum of Natural History) சென்றபொழுது அங்கு இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள Brain - The Inside story என்ற மூளையைப் பற்றிய காட்சியகம் காண வாய்ப்பு கிடைத்தது. மனித மூளை எப்படி இயங்குகிறது, நம் ஒவ்வொரு செயலும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, மூளையின் பரிணாம வளர்ச்சி என்று அருமையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. மூன்று மணி நேரம் அங்கேயே ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து மகிழ்ந்து வந்தோம். நானும் என் கணவரும், ஏன் என் மூத்தவன் பார்த்தது கூட ஆச்சரியமில்லை, என் இளையவன் ஒவ்வொன்றையும் வாசித்து, செய்து பார்க்கும் படி இருந்தவற்றைச் செய்துபார்த்து, கேள்விகள் கேட்டு வியப்பில் ஆழ்த்திவிட்டான். நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை அப்படியே இங்கு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
வாருங்கள் மூளைக்குள் செல்வோம்..உங்க உங்க மூளைக்குள் தான் :)
மெக்கின்சி ஆய்வறிக்கை கூறும் கல்வித்தரம்
இந்தியா மற்றும் சீனப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கியக் கோடிக்கணக்கான பட்டதாரிகள் உலகின் சிறந்த பட்டதாரிகளுடன் போட்டியிடும் திறமை அற்றவர்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா? Masters of Management என்ற நூலில் ஆசிரியர் ஆட்ரியன் வூல்ட்ரிட்ஜ் (Adrian Wooldridge) இப்படிச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை
கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..




