காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை

இன்று நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம். துப்பாக்கிக் குண்டுக்குப்  பலியாகி உயிர்துறந்த காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் தேசத்திற்காக உயிர் துறந்த தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து

சாப்பாட்டு நேரத்தில் சொல்லாடல்-விளையாட்டு

நான், என் இரு மகன்கள், என் கணவர் - நால்வரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுவோம்.  முடிந்தவரை இப்பழக்கத்தைக்  கடைப்பிடிக்க முயல்கிறேன். இந்தப் பழக்கம் கொண்டுவர நான் பட்டபாடு இருக்கிறதே..தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பேசிக்கொண்டுதான் சாப்பிட வேண்டும் நடைமுறைபடுத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. இப்பொழுதும் வெளியூர் செல்லும் நேரங்களில் நழுவிவிடும்.

அமெரிக்காவில் இருந்தவரை இரவு உணவு பெரும்பாலும் ஒன்றாக உண்போம். இப்பொழுது கணவர் வரும் நேரம் அந்த நேரத்திற்குத்தான் தெரியும். அதனால் குடும்ப உணவு நேரம் வாரக்கடைசி நாட்களில் என்றாகிவிட்டது. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது 'நினைவாற்றல் விளையாட்டு'

ஐங்குறுநூறு 18 - பிரிந்தான் அன்றோ

ஐங்குறுநூறு 18,  பாடியவர் ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது

"இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே"


எளிய உரை: இருஞ்சாய் போன்ற செருந்தியோடு நாணல்(வேழம்) கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு என் மலர்போன்ற கண்கள் அழுமாறு பிரிந்துவிட்டானே.

விளக்கம்: இருஞ்சாய் என்பது தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல். அதனைப் போன்றே செருந்தி என்பதும் ஒரு புல். இவை களைகளாக கழனிகளில் வளரும். இந்தப் புற்கள் நாணலோடு கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் தன்னைப் பிரிய மாட்டேன் என்று சொல்லியிருந்தான். ஆனால் பிரிந்து சென்று (பிற மகளிருடன்) தன் மலர் போன்ற கண்களை அழவைத்து விட்டானே என்று தலைவி வருந்திக் கூறுகிறாள். செருந்தி, நாணல், ஆகியவை பிற மகளிரைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

சொற்பொருள்: இருஞ்சாய் - தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல், அன்ன - போல, செருந்தி - ஒருவகை களைப் புல், வேழம் - நாணல், கரும்பின் அலமரும் - கரும்பைப் போல காற்றிலாடும், கழனி ஊரன் - கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், பொருந்தும் மலரன்ன - மலரைப் போன்ற, என் கண் அழப் - என் கண் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ - பிரிந்துவிட்டான் அல்லவா, பிரியலென் என்றே - பிரியமாட்டேன் என்றே

என் பாடல்:  
"இருஞ்சாய் போன்ற செருந்தியும் நாணலும்
கரும்பைப் போல காற்றிலாடும் கழனி ஊரன் 
பிரியேன் என்றேப்  பிரிந்தான் அன்றோ
பொருந்திய மலர்போன்ற என்கண் அழ" 

இருஞ்சாய்/தண்டான்கோரை


படங்கள்:நன்றி இணையம்
செருந்திப் புல்


வந்ததே உனைக் கண்டதும்

image: thanks google

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்

எழுதுகோலை கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

பயனற்ற ஆணவத்தால்

புரியாத பெற்றோர்
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட  மனதுடன் மனைவி

யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!

பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!

பாவேந்தருக்கு மணிமண்டபம்

படம்: நன்றி இணையம்

"நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!"


தமிழ்மொழி தமிழ்நாடு 
என்றே இக்கவி படைத்த
பாவேந்தரே பாரதிதாசனே
நின் புகழ் மேலும் சிறக்க
நின் பாடல் பலரும் அறிய
நின்னையும் தமிழையும் 
நிறைவாய் உலகம் போற்ற சென்னையில்
நிறுவிட வேண்டுமே மணிமண்டபம்
நினைக்க வேண்டுமே அரசும் 
நின் நூற்றி இருபதாவது நினைவாண்டில்(2015)
நிறைவேறட்டுமே இந்த விருப்பமே!

நம் மொழியை நம் கவிஞரை 
நம் சிறப்பை நம் பெருமையை
நாம் போற்றாமல் யார் போற்றுவார்? 
நாம் பரப்பாமல் யார் பரப்புவார்?
நாமனைவரும் இணைந்திடுவோம்
நாடாள்வோருக்குச் சொல்லிடுவோம்

பாவேந்தரின் திருப்புதல்வரைச் சந்தித்த கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியரின் அருமையான பதிவை இங்கே சென்று பாருங்கள்! நன்றி!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.