ரோஜா யாரை நோகும்?

மலர்ந்து காற்றோடு ஆடிய ரோஜா
கிழிந்து  உதிர்ந்தது
முட்களால்
ரோஜா யாரை நோகும்?
முள்ளையா செடியையா?

7 கருத்துகள்:


  1. உதிர்ந்த ரோசா யாரை நோகும் ?

    ஒரு கணம் அயர்ந்து போனேன்.
    உலகத்து அனித்யத்தை
    ஒரு வரியில் சொல்லிவிட்ட‌
    உவமையினை. அதில் நான் கண்ட
    உண்மைதனை .

    நின்றவரெல்லாம் தங்கிவிட்டால்
    இப்புவியிலே புதிதாய் வருபவனுக்கு இடம் ஏது எனும்
    கவியின் குரலைக் கேட்டதில்லையோ ?

    வாழ்வின் சுவையே நிலையாமை தான்.
    வாசமும் பாசமும் உதிர்வனதான்.
    உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால்
    கண் மை என்றும் நோகிடுமோ ??

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சுப்பு தாத்தா, நிலையாமை தானே நிலையானது :)
      //உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால்
      கண் மை என்றும் நோகிடுமோ ??// அருமை..புரிந்துகொண்டால் மை அழிய வேண்டாமே. நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  2. அழமான கவிதை கிரேஸ். சில நேரம் ஆண்டவனின் கணக்கு புரிவதில்லை

    பதிலளிநீக்கு
  3. மலர்வு தருதே மகிழ்வு நியதி
    உலர்வும் உளதே விதி!

    அருமையான கவிதை. ரசித்தேன் தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...