'தமிழ் என் தாய் தந்த அமுதம்' மற்றும் உரோமைத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'வாங்க கொண்டலாம்' என்ற நிகழ்ச்சியைத் திங்கள் தோறும் நடத்துகின்றனர். அதில் ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் அவர்களைக் கொண்டாடிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தனர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உரோமைத் தமிழ்ச் சங்கத்தில் என் சிறப்புரை
அனிகம் நீயே!
தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!
- கிரேஸ் பிரதிபா
அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;
பெண்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் - மனநல ஆலோசகருடன்
அன்புத்தோழி, நிகழ்காலம் வலைத்தளத்தின் வலைப்பதிவர், மனமகிழ் மைன்ட் கேர் நிறுவனர், எழில் அவர்களின் மன நலம் குறித்த விளக்கமும் அறிவுரைகளும்!
'நங்கை கூறும் நவீனங்கள்' எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன். இந்நிகழ்ச்சி தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மனநலம் குறித்துப் பேசலாம் என்று தோழி எழிலிடம் கேட்டவுடன் சரியென்று ஒத்துக்கொண்டார். மனம் நிறைந்த நன்றிகள், எழிலுக்கு! அருமையாக மனநலம் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். காணொலியைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
நன்றி!
பெருமைக்குரிய பெண்கள் நேர்காணல் மற்றும் என் கவிதை - வல்லினச்சிறகுகள்
வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திருமிகு.பிரபா ஸ்ரீதேவன் அவர்களுடனான என்னுடைய நேர்காணலும்.
பட்டிமன்றம்- பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைத்துள்ளதா
வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.
பெண்கள் முன்னேற்றமும் இன்னும் வளரவேண்டியதும் - கலந்துரையாடல்
பெண்கள் வளர்ச்சி அடைந்துவிட்டனரா? இன்னும் என்னென்ன வழிகளில் துறைகளில் வளர வேண்டும்? ஆக்கப் பூர்வமான ஒரு கலந்துரையாடல்!
அனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்
மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாள். அனைத்துலக மகளிர் நாள் என்றவொரு அமைப்பு இருக்கிறது, (International Women's Day). இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மகளிர் நாளின் மையக்கருத்தாக ஒன்றை அறிவிப்பார்கள. பாலினச் சரிசமநிலைக்கு நாம் எப்படிப் பங்களிக்கலாம் என்று பல்வேறு வழிமுறைகளைச் சொல்லி ஒவ்வொருவரையும் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...



