சுற்றுச்சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா?


எல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அதிலும் அண்ணனுக்கு வலிமை அதிகம். இப்பொழுது பெய்யும் மழைக்கும் எல் நினோ காரணமாய் இருக்கலாம்.

மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்


    





    






    அலைபேசி! தொழில்நுட்ப வளர்ச்சியின் செல்லக் குழந்தை. தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு என்ற உபயோகத்தைத் தாண்டி, குறுஞ்செய்தி அனுப்புவது, படங்கள் அனுப்புவது என்று முன்னேறி இன்று உலகை நம் கையில் கொண்டுவரும் அலைபேசி, தொலையும் மழைக்காடுகளையும் காக்கப் பயன்படுவது மகிழ்வான விசயம். அதுவும் ஒரு இளைஞரின் ஆக்கபூர்வ சிந்தனையாலும் உழைப்பாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது.

அலையும் நுரையும் கடலல்ல



   சுற்றுலா என்று மலைப்பிரதேசத்திற்கும் கடற்கரைக்கும் செல்கிறோம். பசுமையைப் பார்த்து பரவசமாகிறோம். அலைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறோம். ஆனால் இவ்விடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசிப்பதில்லை. நம் தாத்தா பாட்டன் காலத்திலும் அதற்கு முன்னும் எப்படி இருந்திருக்கும்? வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்

கட்டுக்குள் வருமாக் கரிமக் கால்தடம்?


மனிதனின், விலங்குகளின், பறவைகளின், செடிகொடிகளின் - பூமியின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழல். நாம் பார்க்கும், உணரும், சுவாசிக்கும், கேட்கும், நுகரும் அனைத்துமே நம் சுற்றுச்சூழல் தான். உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என்று அனைத்தும் சுற்றுச்சூழலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலுக்கு நாம் என்ன செய்கிறோம், நம் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கண்டிப்பாக வேண்டும்.

உள்ளதில் நீயுமடா



காடழித்துக் கானகம் நாடாக்கி
நாகரிக மனிதன் நானென்று  
மார்தட்டி மயங்கும் மனிதா பார்
மார்புவற்றிப் பூமித்தாய் தவிப்பதை

நான்தான் இல்லை... நானும்தான்

ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டித் தண்ணியா?
என்றேன்

அட போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள்

நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.