வண்ண பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி! வண்ண பட்டாம்பூச்சி!
நறுமணம் வீசும் மலரில் சிலையென நீ அமர்ந்திருந்தாயே
அந்த அழகைக் கண்டே மெய்மறந்தேன், நானே சிலையானேன்
சிட்டுக் குருவி தத்தி வந்தால் நான் என்ன செய்வேன்?
நொடியில் சிறகடித்துப் பறந்துச் சென்றாயே!
சிலையென இவள் என்ன செய்கிறாள் என்றே
குருவியும் தலையை ஆட்டி ஆட்டிப் பார்க்கிறது
வண்ணச் சிறகை விரித்தே நீ மீண்டும் அருகில் வா!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...