வண்ண பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி! வண்ண பட்டாம்பூச்சி!
நறுமணம் வீசும் மலரில் சிலையென நீ அமர்ந்திருந்தாயே
அந்த அழகைக் கண்டே மெய்மறந்தேன், நானே சிலையானேன்
சிட்டுக் குருவி தத்தி வந்தால் நான் என்ன செய்வேன்?
நொடியில் சிறகடித்துப் பறந்துச் சென்றாயே!
சிலையென இவள் என்ன செய்கிறாள் என்றே
குருவியும் தலையை ஆட்டி ஆட்டிப் பார்க்கிறது
வண்ணச் சிறகை விரித்தே நீ மீண்டும் அருகில் வா!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.