இரண்டு மூன்று வரிகளில்...

பூச்செடியின் கோபம்
பூச்செடி பூக்கள் தரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டது
நீ என்னை இகழவே உன் அவளிடம் பூக்களைக் கொடுக்கிறாய் என்று!

முதல் காதல்
அடடா இது அல்லவோ இன்பமான சுகம்
இத்தனை நாட்கள் ஏமாற்றி விட்டாயே தென்றலே!

தொழில் நுட்பம்
இன்று வந்து நாளை போகின்றன சாதனங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சி!

இனிய முரண்
நேற்று நிலா உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது என்றேன், நம்பினான்
'அம்மா உனக்கொன்றும் தெரியாது' என்று இன்று சொல்லும் என் மகன்!

எதிர்பார்ப்பு
என் அம்மா சமையலுக்கு ஈடாகுமா என்ற கணவரின் எண்ணம் மாற எதிர்பார்த்தேன்
மாறியது, "என் மகள் அம்மாவை மிஞ்சிவிட்டாள்' என்று!
இடையில் நான் தொலைந்து போய் விட்டேன்!  

2 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...