புன்னகை

சத்தமின்றி இனிதாய்ப் பல கதை சொல்லும்
போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும்
மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும்
மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்

இது ஆற்றும் செயலோ மிகவும் வலியது
ஆனால் இதை உண்டாக்கும் தசைகளோ மெலியது
ஏழை பணக்காரர் ஆண் பெண் இப்படி எந்தப் பாகுபாடுமில்லை
இதை உடைமையாக்கக் கடிது உழைக்கத் தேவையில்லை

குழந்தை முதல் முதியவர் வரை அணியக் கூடிய நகை
விலை மதிப்பில்லாத அழகு சேர்க்கும் நகை 
ஈடு இணை இல்லாப் பொன்னகை
அது தான் அழகு நகை - புன்னகை!

2 கருத்துகள்:

  1. அழகாய்ச் சொன்னீர்கள் கிரேஸ்... புன்னகையின் பலமே தனி..
    //போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும் மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும் மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்// - கருத்தாழமிக்க வரிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!