மேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குழம்பின மேகங்கள்

தீபாவளித் திருநாள்
திக்கு எட்டு  எங்கிலும் 
திணற வைத்த ஒளியும் ஒலியும்

என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்

ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்

மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின

மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச்  சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே 

குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே

பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள்  நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!

மேகம்

அழகு வடிவம் ஈர்த்தாலும் 
அணைத்துக்  கொஞ்ச இயலாது!
பஞ்சணை போல் இருந்தாலும் 
படுத்து உறங்க முடியாது!

பலவிதமாய் உருமாறும் தோற்றம் 
ஆனால் அனைத்தும் அழகு!
பிரமாண்டமாய் உருவம் இருந்தாலும்
ஊடுருவிச் செல்லும் மென்மை!

நிலவையும் கண்டு மயங்காமல் 
அனலியையும் கண்டு தயங்காமல் 
சேரும் இடம் நோக்கி 
கடமையாய்ப்   பயணிக்கும் பயணி!

நிலை இல்லாத நாடோடி
ஆனால் வானம் உன் வசம்!
நிலம் குளிர்விக்கும் முன்னோடி
நகர்ந்து செல்லும் மேகம்!

அனலி - சூரியன் 


கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.