தீபாவளித் திருநாள்
திக்கு எட்டு எங்கிலும்
திணற வைத்த ஒளியும் ஒலியும்
என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்
ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்
மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின
மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச் சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே
குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே
பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள் நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!
திக்கு எட்டு எங்கிலும்
திணற வைத்த ஒளியும் ஒலியும்
என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்
ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்
மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின
மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச் சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே
குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே
பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள் நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!