காகிதக் கப்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காகிதக் கப்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து



 பெரும் பெயல் பொழிந்த சனிக்கிழமை மாலை
ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி 
சாரலோடு மகிழ்ந்து காகிதக் கப்பல் செய்து
நீரில் அவை மிதப்பதும் மூழ்குவதும் கண்டு
மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து நிற்க 
'இந்தாருங்கள் சாக்லேட்', அம்மா சொல்ல
'நற்சொல் கேட்டனம்' என்றே மகிழ்ந்தனர் புதல்வர்


 
"பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" என்ற முல்லைப்பாட்டு வரியின்  (வரி எண்.6) இனிய தாக்கம் இக்கவிதைக்கு அடித்தளம் அமைத்தது.



சொற்பொருள்: பெயல்- மழை, மருங்கில் - அருகில், போகி - சென்று, கேட்டனம் - கேட்டோம்

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...