அருள் தாருமே

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007

பல்லவி:
அருள் தாருமே  அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே

1.
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ  என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட  உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே

2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
 உம்முடன் நடக்க அருள் தாருமே 

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...