தின்பதற்குப் பலவித இனிப்புகள்
தான்செய்வது பாதி பிறர் தருவது பாதி
திகட்ட உண்டு திளைப்பதுவாத் திருநாள்?
மானம் மறைக்கத் துணி தேடும்
மாந்தர் தம்மைக் கவனியாமல்
மயங்கிக் களிப்பதுவாத் திருநாள்?
ஏற்கெனவே ஓட்டைப் போட்ட சாரலியத்தை (ஓசோனை)
ஏகத்துக்கும் அழித்துவிட உறுதிகொண்டு
ஏவிவிடும் ராக்கெட்டும் வெடியுமாத் திருநாள்?
விளையாட்டுப் பருவம் தொலைத்து
வினை செய்யும் நிலையொழிந்து சிறுவர்
விளையாடிச் சிரிக்கும் நாளே திருநாள்
வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்
மருந்துக்கும் உணவில்லா மாந்தர் சிலர்
குவளை உணவை மூவேளையும் பெற்றிட
நாம் சிரிக்கும் நாளே திருநாள்
நல்நெறி தழைத்து நயவஞ்சகம் வேரொழிந்து
நல்லதோர் உலகம் நயமாய் உருவாகி
நாம் சிரிக்கும் நாளே திருநாள்!
இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். கவிதை அனுப்புவதற்கான இறுதி நாள் 31-10-2013. மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கவும், நன்றி!
