புதுக்கோட்டை புத்தகத் திருவிழா



புத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும்
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா!
புத்தக வாசனை பிடித்து
வாங்கி படித்து 
வாழ்வில் சிந்தித்து 
உயர்ந்திடவே 
புறப்படுங்கள் 
புத்தகத் திருவிழாவிற்கு!

நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்!

விதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய  இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி!

ஐங்குறுநூறு 35 - நார் உரி ஆம்பல் மென்கால்


 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

நீ


Image: Thanks Google
















ஒவ்வோரடிக்கும் எட்டுத்திக்குகள் 
எந்த திக்கிலும் 
உடனிருக்கிறாய் நீ

எண்ண அலைகள் 
போராட்டம் என்கிறேன் 
பேராற்றல் என்கிறாய் நீ 

காட்டுத்தீ


காட்டுத்தீ... காட்டுத்தீ
எங்கோ என்று செய்திவரும்
ஐயோ!
மரங்கள்..!! மிருகங்கள்!!
பறவைகள் பறந்திருக்குமா?!!
மோதிடும்  எண்ண அலைகள்!

ஆனால் இன்று?
சென்றமாதம் மலையேறி
வியந்து ரசித்த
காடழிவதின் வெப்பம்
கண்ணில் உணர்கிறேன்
எரிச்சலும் புகைமூட்டமுமாய்!

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...