அருள் தாருமே

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007

பல்லவி:
அருள் தாருமே  அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே

1.
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ  என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட  உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே

2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
 உம்முடன் நடக்க அருள் தாருமே 

என்னோடினைந்த இறைவா

2007 மார்ச்சில் எழுதியது ...

பல்லவி:
என்னோடு இணைந்த  இறைவா நன்றி
என்னுள்ளம் எழுந்தத்   தலைவா நன்றி

1. காலையில் தோன்றும் கதிரவனாய்
    மாலையில் வீசும் தென்றலாய்
   இரவில் ஒளிரும் விண்மீனாய்
   என்னோடினைந்த இறைவா நன்றி

2. சுவாசத்தில் கலந்த காற்றாய்
    என்னுள் ஓடும் உதிரமாய்
    என்னுள் துடிக்கும் இதயமாய்
    என்னோடினைந்த இறைவா நன்றி

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...